Skip to main content

Posts

கம்பன் என் காதலி

தமிழ் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போது எத்தைகய இனிமை இருக்கிறதோ, அது போல "கம்பர் " என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும்,  இறுமாப்பும் எனக்கு ஏற்படுவது உண்டு.    அதிலும் தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கம்பனை, அவன் பாடல்களை  விளக்கும் போது மனம் குதூகளிக்கும் . கண்ணதாசன் உள்ளிட்ட பல கவிஞர்களின் எழுத்து வண்டி ஓடியதே,   கம்பனின் கவிதைகளை  அதன் சாரத்தை  அவர்கள் கடன் வாங்கிக் கொண்டதால்தான். இது முற்றிலும் உண்மை,  அதை கவியரசு கண்ணதாசனே கூறியிருக்கின்றார். சரி விடயத்திற்கு வருகிறேன் புலவர்களின் பாடக்கருத்தை விளக்கும் உரைகளான தெளிவுரை,  நயவுரை,  பொழிப்புரை என்பன போன்றவைகள் புலவன் கூறவந்த உண்மையான கருத்தை படிப்போருக்கு விளக்குகிறதா ?  என்றால்  ஆம் என்று நிச்சயம் கூறிவிட முடியாது. ஏனெனில் ? யானையை தடவி பார்த்த  குருடர்களின் கதை போன்றுதுதான் , யானையின் வாலை பிடித்து பார்த்த குருடன் யானை என்பது மெல்லியதாக நீட்டமாக இருக்கும் என்றும்,   மற்ற ஒரு குருடன் யானையின் காலை பிடித்து பார்த்து ய...

இழந்த போன கிராமங்கள்

மக்கள் சோம்போறியானர்களா ?  கார்ப்பரேட்டுகள் மக்களை சோம்பேறியாக்கினார்களா ? கொரோனா நோய்த்தொற்று வந்த பிறகுதான் கிராமங்களில் வாழுவோரையும் நவீன விளம்பரங்கள் மூல...

நிலன் நோக்கும் பூக்கள்

 அணைவருக்கும் வணக்கம்.  ஊரடங்கில் உடல் அடங்கிக் கிடந்தாலும், உள்ளம் அடங்கிடுமா ?  அல்லது தமிழ் இலக்கிய  எண்ணம்தான் மனதில், சிந்தையில்  ஒடுங்கிடுமா ? நான் புது வித கோணத்தில் ( நூலாசிரியன் கருத்து அல்ல)  அணுகிய சில இலக்கியக் வரிகளின் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கமாகும். இலக்கியம் என்றாலே, எலக்கியம் கிலோ என்ன விலை?  என்று கேட்கிற புது தலைமுறை வந்துக்கொண்டிருக்கும்  காலக்கட்டத்தில், இலக்கியம் பேசுபவனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமும் வருகின்ற காலமிது.  ஆனாலும் இலக்கியத் இன்பத்திற்கு நிகர இறைவன் இதுவரை எதனையும் படைத்தளிக்கவில்லை என்றே அறிஞர் உணர்வர். இலக்கியங்கள் படிப்பவனின் காலச்சூழல், மனச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப தனது கருத்தையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் ஆற்றல் வாய்ந்தது. நூலாசான் கூற வந்த கருத்து உணர்ச்சி  படிப்பவனுக்கும் ஏற்பட வேண்டும். ஆனாலும் படிப்பவன் தன் சமகால சூழலுக்கு ஏற்ப நூலாசானுக்கு சிறுமை ஏற்படாதவாறு, வேறு விதமான பொருளை கூறுதலும் உண்டு. இது தவறல்ல. உதாரணத்திற்கு ஒரு தி...

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம் எங்க ஊரு சுத்தமல்லியில் நான்  1989 களில் பள்ளியில் படிக்கும்போது, தொடக்கப்பள்ளிக்கும், உயர்நிலைப்பள்ளிக்கும் நாங்கள் வைத்திருந்த பெயர்  சின்னப்பள்ள...

சொல்லேருழவன்

வில்லேரருழவனும்,  சோல்லேருழவனும்.            சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்,  அவன் பகைவனான மலையமானின் புதல்வர்களை யானைக்காலின் கீழ் கிடத்தி கொல்ல முயல்...

மிட்டாய் சண்டை

இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட  முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும்.  ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய  ...