Skip to main content

Posts

Showing posts from October, 2019

மிட்டாய் சண்டை

இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட  முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும்.  ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய  இரண்டு ஸ்வீட் கடைக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் நமக்குதான் மகிழ்ச்சி வரும்.    ஏனெனில் ஒருவன் மைசூர்பாக் மிட்டாயை எடுத்து வீசி அடுத்த கடைக்காரனை அடிப்பான், அவனோ ஜிலேபியை எடுத்து இவனை நோக்கி  வீசுவான் இப்படியாக சண்டை நடந்தால் நமக்குத்தான் லாபம் மற்றும் மகிழ்ச்சிதானே ! .     மேலே சொன்ன நிகழ்வைப் போல இரு புலவர்கள் கவிதைச் சண்டை போடுகிறார்கள் ஒருவர் ஒட்டக்கூத்தர் மற்றொருவர் புகழேந்திப் புலவர். இது கண்ணால் பார்த்ததல்ல, கல்லூரியில் படிக்கிற காலத்தில் தத்தனூர் கிளை நூலகத்தில் பழைய நூல்களை எடைப்போட்டு வாங்கிய போது கிடைத்த தனிப்பாடல் திரட்டு எனும் நூலில்  படித்தது என்றுணர்கிறேன்.  கவிப்பேரரசு வைரமுத்து போல் திரைப்படத்திற்கு நீங்கள் ஏன் பாட்டெழுதுவதில்லை?  என கவிக்கோ அப்துல்ரகுமானிடம் ஒரு  பத்திரிகையாளரால் அந்த கேள்வி கேட்கப்படுகிறது,  அந்தக் கேள்விக்கு அவர் கூறிய பதிலில் இருந்து ஒரு இலக்கிய சண்டை அரங்கேற ஆயத்தமாகிறது,  அக்கேள்வ