என் பதிவல்ல.மாபெரும் திண்ணை இணைய இதழில் லதா ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு. பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே. இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின், பொறாமை, பொச்சரிப்பாக வெகு எளிதாகப் பகுக்கப்படும் என்று நன்றாகவே தெரிந்தும் வாளாவிருக்க முடியவில்லை. என்ன செய்ய? எழுத்தாளருக்கு மரியாதை செய்வதாய் பறையறி விக்கப்படும் விழாக்கள் கூட்டங்களிலெல்லாம் திரைப்படத்துறையினர் வந்தால் எழுத்தாளர்கள் ஓடிப்போய் அவர்களை அத்தனை விநயமாக வரவேற்பது கூட நம் வழிவழியான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா? தனக்காக நடத்தப்படும் இலக்கியக் கூட்டத்தில் தள்ளாமையை மீறி ஆர்வமாகக் கலந்துகொள்ளும் தரமான மூத்த எழுத்தாளரைப் பார்த்து மெலிதாக புன்முறுவலித்து அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் சராசரி சினிமாக்காரரை வரவேற்க வாயெல்லாம் பல்லாக விரைவதுதான் வழிவழியான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா? படைப்பாளி பேசப்பேச அதை சிறப்புப் பார்வையாள ராய் முன் வரிசையில் வீற்றிருக்கும் திரையுலகப் பிரமுகர் எப்படி கவனிக்கிறார் என்பதையே , மேடை யி