Skip to main content

Posts

Featured post

படித்ததில் பிடித்தது.

சமீபத்தீல்  ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன். கம்பெனிக்காரர்கள் நல்லவர்கள் போலும்  அதில் சில சிப்ஸ்களையும்  போட்டிருந்தனர்.  ###BINGO
Recent posts

சுத்தமல்லி,புளியங்குழி

அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர்  நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி.  ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம்.   கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும்.  சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரிக்காடுகளும் அதிகம். அதே

ஆலம்பள்ளம்

 எங்கள் ஊர் சுத்தமல்லி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயர் ஆலம்பள்ளம். பொதுவாக அந்த ஊருக்கு உள் நுழையும் முன் மிக சரிவான பள்ளத்தில் இறங்குவது போன்ற நிலவியல் அமைப்பு இன்றும் இருக்கிறது. ஒரு வேளை ஆள் உயர பள்ளம் (அ)ஆல் உயர பள்ளம் அதாவது ஆலமர உயர அளவு பள்ளம் என்பதே இவை மருவி ஆலம்பள்ளம் என வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.  --------+-சுரேஷ் மணியன் M.A,

களவும் கற்று மற

களவும் கற்று மற.! திருட்டையும்  கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ?   நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை.  பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை  இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது.  முன்னது ( திருமணத்திற்கு  முன் ) களவு வாழ்க்கை , பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை.   மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு  தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்படுவது இல்லற வாழ்க்கை.   சரி மேட்டருக்கு வருவோம்.   ஒரு ஆண் கள

நான் ஏன் தமிழ் படித்தேன்?

நான் ஏன் தமிழ் படித்தேன் ? எதனால் தமிழ் பாடத்தை தேர்வு செய்தேன் ?  இது போன்ற இன்ன பிற கேள்விகளும் தூக்கமில்லா இரவுகளில் எனக்குள் நானே எழுப்பி கொள்வதுமுண்டு.  அப்போ நான் பத்தாவது படிக்கறச்சே,  கேபிள் கனெக்ஷன் கிராமத்தை எட்டிப் பார்க்காத அந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி சேனல் மட்டுமே வாய்த்தது. ஞாயிறு மாலை மட்டுமே திரைப்படம் போடும் முன்னதாக, வசந்த் &கோ நிறுவனம் வழங்கும் " சாப்பிடலாம் வாங்க " என்கிற சமையல் நிகழ்ச்சியின் முடிவில் சமைத்த பதார்த்தங்களை உண்டு ருசி பார்த்து பரிசு தர வருவார் அமரர் வசந்தகுமார் அவர்கள்.  அப்போது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் வசந்தகுமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்  .  நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகாவிட்டால், வேறு என்னவாக ஆகியிருக்க ஆசைப்பட்டிருப்பீர்கள் ?  என்று, வசந்தகுமார் கூறினார் " நான் தமிழ் படித்து ஒரு தமிழ் பேராசிரியராக ஆகியிருப்பேன், எனக்கு கம்பனின் ராமகாதை மிகவும் பிடிக்கும்  ராமன் நாடு துறந்து காடேகும் நிகழ்வை கம்பர் பாடுவார்  சீரை சுற்றித் திருமகள் பின்செல, மூரி விற்கை இளையவன் முன்செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணும

தாங்கல், தாங்கல்

ஏந்தல், தாங்கல், என்ற இரு சொற்களின் பொருளறிவோம்  அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில்  இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது . ஆனாலும் இரு சொற்களும் நீர்நிலையை குறிக்கும் சொல்லாகும்.  மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை உடைய நீர் நிலை  ஏந்தல் ஆகும்.உடையார்பாளையம் அருகே உள்ள இடையாறு பக்கம் உள்ள ஏரிக்கு அருகே உள்ள ஊரின் பெயர் ஏந்தல் ஆகும். ஏரியின் பெயரே ஊர்ப்பெயராகவும் ஆயிற்று. தாங்கல் என்பது அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் அல்லது ஆற்று நீரை சேமிக்கும் நீர் நிலையின் பெயரே தாங்கல் ஆகும் .தாங்கலேரி எனும் பெயர் கொண்ட ஏரி தத்தனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நீர்நிலையின் பெயர் தாங்கலேரி என்பதாம்.   ஆக ஏந்தல், என்பதும், தாங்கல் என்பதும் நீர்நிலையின் பெயராகும்.  ஆய்ந்தறிவீர் தமிழ் மறவீர்! இப்படிக்கு - சுரேஷ் மணியன் M.A,

வாழ்க்கை

உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ !  பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன; Have a child, Plant a tree, Write a book - Jose Marti ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும். புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்த்து