அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர் நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி. ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம்.
கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும். சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரிக்காடுகளும் அதிகம்.
அதே போல் இன்றைய நாட்களில், கடலை, முருங்கை,காய்கனிகள் மிகுதியான அளவில் விளைவிக்கப்படுவதால் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது .
புளியங்குழி
நம்மில் அநேகம் பேர் மற்றவர் கூறினார் என்பதற்காக அந்த வார்த்தையை, பெயரை வழி வழியாக பேசி வருகிறோம். அந்த சொல்லின் பொருள் என்ன? ஏன் அப்படி அழைத்தார்கள்? அழைக்க காரணம் என்ன.? என்று யோசிப்பதில்லை. நம்மில் அநேகருடைய பெயர் கண்டிப்பாக தமிழில் இல்லை. ஏழை வீட்டு கத்தரிக்காய் குழம்பில் எங்கோ ஒன்றிரண்டு காணப்படும் காய்த்துண்டுகளைப் போல தமிழ் பெயர்கள் காணலாகிறது. ஊர்ப் பெயரும் அவ்வாறே. ஆரியர்களாலும், ஆங்கிலேயர்களாலும், நம்மவர்களாலும் சிதைக்கப்பட்டன,மாற்றமாயின. புளி+அம் +குழி =புளியங்குழி
புளிய மரங்கள் சூழ்ந்த அழகிய ,இனிய நீர்நிலை குழி எனலாம்
படத்தில் காட்டப்பட்டுள்ள
இரண்டாவதுநீர்நிலைதான் பதினைந்து ஆண்டுக்கு முன்வரை குடிநீராக பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வூர் தோன்றிய நாள் முதல் இன்றுவரை அந்த நீர்நிலையை சுற்றி புளிய மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.....
Comments
Post a Comment