Skip to main content

Posts

Showing posts with the label சுரேஷ்மணியன். காதல்பயிர்

குறள்கவிதை

         குறள்கவிதை  மங்கைகொண்ட காதலை மடைமாற்றலாம்  என்று நினைக்காதீர் ! என் இதய வயலில்  நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் !  ஊரார் ஏளனப் பேச்சை எருவாக்கி  தாயின் இடிச்சொல்லை நீராக்கி  இதய வயலில்  காதல் பயிர் வளர்க்கிறேன் ! பரிகாசம் பேசி காதல் பயிரை  அழித்துவிடலாமென எண்ணாதீர் ! நெய்யை ஊற்றி  நெருப்பை அணைக்க முயலாதீர் ! என் இதய வயலில்  நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன்  .          கவிதையின் கரு  ;  ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (குறள் எண்:1147) நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் (குறள் எண்:1148) வள்ளுவர் வரிகளுடன்  ; சுரேஷ்மணியன் M A,