குறள்கவிதை
மங்கைகொண்ட காதலை மடைமாற்றலாம்
என்று நினைக்காதீர் !
என் இதய வயலில்
நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் !
ஊரார் ஏளனப் பேச்சை எருவாக்கி
தாயின் இடிச்சொல்லை நீராக்கி
இதய வயலில்
காதல் பயிர் வளர்க்கிறேன் !
பரிகாசம் பேசி காதல் பயிரை
அழித்துவிடலாமென எண்ணாதீர் !
நெய்யை ஊற்றி
நெருப்பை அணைக்க முயலாதீர் !
என் இதய வயலில்
நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் .
கவிதையின் கரு ;
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்
(குறள் எண்:1147)
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்
(குறள் எண்:1148)
வள்ளுவர் வரிகளுடன் ; சுரேஷ்மணியன் M A,
Comments
Post a Comment