Skip to main content

Posts

Showing posts from September, 2020

போய் வா ! தங்க மகனே !

_ போய் வா தங்க நிலாவே ! _  " பாடும் நிலாவே  'பாடிய நீ  இன்று பாட மறுப்பதென்ன !  " குயில புடிச்சி கூண்டில் அடச்சி  கூவச் சொல்லுகிற ஒலகம்  ' என்று பாடிய நீ  எங்களை தவிக்கவிட்டு கூண்டோடு பிரிந்ததென்ன !  இந்திர உலக இளசுகளின் நடனத்திற்கு பின்பாட  உன் தேன் நா உடன் கொண்டு பிரிந்தாயோ ! மாத்திரை அளவும் மாறாமல்  தமிழ் அறிந்து பா பாடும் உன்னை  தன் விருத்தப்பா நீ பாட  என் பாட்டன் கம்பன் அழைத்தானோ ! கோடம்பாக்கத்து கூத்தர்களை புகழ்ந்தது போதும் என்றெண்ணி  கவிராட்சசன்  ஒட்டக்கூத்தன் நினைத்தானோ ! தன் சிந்துக்கு நீ குரலிசைக்க வேண்டி  எட்டயபுர கவிராஜன் பாரதி  அழைப்பு விடுத்தானோ ! ஆறடி கரும்பை காற்படி சாறாக்கி  கவிச்சாறு பிழிந்து வைத்து உனக்காக காத்துகொண்டிருந்த  கவியரசு கண்ணதாசன்  உனக்கு வருகை மடல் வரைந்தானோ !  சத்தான தமிழில் முத்தான சொல்கொண்டு  கல்கண்டு நிகர் கவியெழுதி வைத்திருக்கும்  அண்ணன் முத்துக்குமார்   உன்னை வாவென பகர்ந்தானோ ! அரிதார முகங்களை பாடியது போதுமென  அவதார நாயகர்களை நேரில்  அர்ச்சிக்க யாத்திரை போயிருப்பாய்   அர்ச்சனை முடித்து  நீண்ட யாத்திரை  விடுத்து  நீ திரும்பி வரும்ப