Skip to main content

போய் வா ! தங்க மகனே !


_ போய் வா தங்க நிலாவே ! _

 " பாடும் நிலாவே  'பாடிய நீ 
இன்று பாட மறுப்பதென்ன ! 

" குயில புடிச்சி கூண்டில் அடச்சி 
கூவச் சொல்லுகிற ஒலகம்  '
என்று பாடிய நீ 
எங்களை தவிக்கவிட்டு கூண்டோடு பிரிந்ததென்ன ! 

இந்திர உலக இளசுகளின் நடனத்திற்கு பின்பாட 
உன் தேன் நா உடன் கொண்டு பிரிந்தாயோ !

மாத்திரை அளவும் மாறாமல் 
தமிழ் அறிந்து பா பாடும் உன்னை 
தன் விருத்தப்பா நீ பாட 
என் பாட்டன் கம்பன் அழைத்தானோ !

கோடம்பாக்கத்து கூத்தர்களை புகழ்ந்தது போதும் என்றெண்ணி 
கவிராட்சசன் 
ஒட்டக்கூத்தன் நினைத்தானோ !

தன் சிந்துக்கு நீ குரலிசைக்க வேண்டி 
எட்டயபுர கவிராஜன் பாரதி 
அழைப்பு விடுத்தானோ !

ஆறடி கரும்பை காற்படி சாறாக்கி 
கவிச்சாறு பிழிந்து வைத்து உனக்காக காத்துகொண்டிருந்த 
கவியரசு கண்ணதாசன் 
உனக்கு வருகை மடல் வரைந்தானோ ! 

சத்தான தமிழில் முத்தான சொல்கொண்டு 
கல்கண்டு நிகர் கவியெழுதி வைத்திருக்கும் 
அண்ணன் முத்துக்குமார்  
உன்னை வாவென பகர்ந்தானோ !

அரிதார முகங்களை பாடியது போதுமென 
அவதார நாயகர்களை நேரில் 
அர்ச்சிக்க யாத்திரை போயிருப்பாய்  

அர்ச்சனை முடித்து 
நீண்ட யாத்திரை  விடுத்து 
நீ திரும்பி வரும்போது 

Spb எனும் தங்கக் குரலே 
Tms எனும் வெண்கலக்குரலையும் 
கரம் கோர்த்து அழைத்து வருவாய் 
என கண்ணீரோடு காத்திருக்கிறோம்.

 "" என்னவென்று சொல்வதய்யா  உன் தங்கக் குரல்  பேரழகை

சொல்ல மொழி இல்லையய்யா  உன் கிள்ளைக் குரல்  நாவழகை

கொஞ்சம் தொந்தி சரிந்தவரே  எங்கள் நெஞ்சில் நிறைந்தவரே 

எங்கள் துயரத்தை என்னென்று சொல்வோமோ  
அதை எப்படி சொல்வோமோ  '' 

நீ வான்மேகம் காணாத பாலு  நிலா
இந்த பூலோகம் பாராத மண்  நிலா

கண்ணீரோடு விடை கொடுக்கிறோம் கலைஞனே !

  ; சுரேஷ் மணியன்M a,

Comments

  1. என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.

    ReplyDelete
  2. அருமையான பாடல்
    சுத்தமல்லி நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பிறகுதான் உடையார்பாளையம், பரணம் உள்ளிட்ட பல ஊர்களில் நிலத்தடி நீர் உயர்ந்து, தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்பட்டது.

    ReplyDelete
  3. உங்கள் கானம் எங்கள் காதுகளை வருடும் வரை உங்கள் புகழ் ஓங்கி ஒளிக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட