Skip to main content

Posts

Showing posts from May, 2020

சுத்தமல்லி

இன்று பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது போல் என் ஊரான சுத்தமல்லியில் ஜம்பது வருடங்களுக்கு முன்னால் தேசிய கீதத்திற்கு முன் ஒரு கிராம கீதம் பாடுவார்களாம்,  அந்த பாடலை என் தந்தை கூற கேட்டுள்ளேன். ஆனால் அந்த பாடலின் ஆசிரியன் யார் என தெரியவில்லை. " எங்கள் ஊர் சுத்தமல்லி விளையும் பயிர் கொத்தமல்லி வடபாகத்தில் கருங்காடு மேல்பாகத்தில் மணல் காடு தென்பாகத்தில் செம்மண் காடு கோடை நாளில் கொத்தி நிலத்தை சீர் செய்வோம் ஆடி மாதம் விதைத்திடுவோம் ஐப்பசிக்கு முன் அறுத்திடுவோம் நாங்கள் பள்ளிக்கூடம் செல்லவே பாலும் சோறும் உண்ணவே எங்கள் அம்மா அப்பா காட்டிலே அலுத்து அலுத்து உழைக்கின்றார் எங்கள் ஊர் சுத்தமல்லி விளையும் பயிர் கொத்தமல்லி. இப்பாடலின் ஆசிரியர் யாரோ  !!!

கொரோனா ( கொ.பி. )

வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது ட்டுடுக் ட்டுடுக்  என  ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்     முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல தரைக்கு முத்தமிட்டு விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கும் வெற்றிலை குதறிய வாய்களை போல கரிவாயுவை உமிழ்ந்தவாறே கனரக வாகனங்கள் இரையத் தொடங்கும்    கதைகளில் கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் திண்ணைகள் என கொரோனா பேசுபொருளாகி கடந்துவந்ததை அசை போட்டு பார்க்க வைக்கும் ஆறுகளின் கர்ப்பத்தை அழித்து மணல் குருதிகள் அள்ளும்  வேலைகள் மீண்டும் தொடங்கும்    திருமண வீடுகளிலும் ,இன்னபிற நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளோடு, மாஸ்க்கும் தரப்படலாம் ரெய்ன் கோட்டுகளைப் போல கொரோனா கோட்டும் கடையின் வாசல்களில் தொங்கலாம்    அடுத்தவரின் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவனுக்கு "கொரோனா " எனவும் பட்டப்பெயர் சூட்டலாம் கொரானா காலத்துல கூட இம்புட்டு வெலை விக்கில "இப்போ இம்புட்டு வெலையா ? என ,ஏதோ ஒரு சந்தையில் கிராமியப் பெண்ணின் குரலை  கேட்க நேரிடலாம்     " ஊரு ஒலகத

கல்லூரி

கல்லூரியில்  படித்த ஒவ்வொருவரின் ஆட்டோகிராப் புத்தகங்களிலும் " நீ நேசித்தவர் உனக்கு கிடைக்காவிட்டாலும் உன்னை நேசித்தவரை நீ விரும்பு " என  ஆண், பெண்  தோழமைகள் எழுதிய வாசகங்கள் கண்டிப்பாக உங்களிடமும் இருக்கும்.

மூவர்ணத் துண்டு

இன்றைய கொரோனா நோய்த்தொற்றுக்காலத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஏதும் வழங்காத அதிமுக வையும் ,அந்தக் கட்சியினரையும் பற்றி புலம்பி தீர்த்ததோடு அல்லாமல்  , நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வரும் திமுக வினரையும் பாராட்டி , அவர்கள் கொடுக்கும் நல உதவிகளை பெற தமது கட்சியினர் கூச்சப்படுவதையும் அப்பகுதியை சார்ந்த ( நாகை மாவட்டம் என தோன்றுகிறது  )அதிமுக  கட்சியை சார்ந்த நிர்வாகி ஒருவரின் ஆதங்கமான காணொளி ஒன்றை முகநூலில் ,  நண்பர் வின்சென்ட்ராஜ் அவர்களின் பக்கத்தில் பார்க்க நேரிட்டது. அந்தக் காணொளியை பார்த்த பிறகு மனதில் நாஞ்சில் நாடன் அவர்களின் "விரதம்" என்ற சிறுகதை பளிச்சென்று நகைச்சுவையோடு  நினைவுக்கு வந்து போனது . அந்த சிறுகதையின் கடைசியில் , முதன்மை பாத்திரமான சின்னதம்பியா  பிள்ளை  தனக்குத் தானே உள்ளூர சொல்லிக் கொள்வதாய் கதை இறுதி கட்டத்தை நெறுங்கும்  " சே !  எல்லாம் இந்த திருநீறால் வந்த வினை  " ஆனால் அந்தக் கதையில் தற்போதைய சூழலை வைத்து கதைக்கருவை மாற்றி ,சின்னதம்பியா பிள்ளை  இடத்தில் ஒரு அதிமுக வினர் ஒருவரை பொருத்தினால் சே !  எல்லாம் இந்த மூன்று கரை போட்ட துண்ட

Sureshmaniyan: பாருக்குள்ளே நல்ல நாடு

Sureshmaniyan: பாருக்குள்ளே நல்ல நாடு : தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கத...

பாருக்குள்ளே நல்ல நாடு

தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )   அரசியல் இயக்கங்களும்,தன்னார்வலர்களும், அமைப்புகளும், சில பல நல்ல உள்ள கொண்டோரும் தங்களால் இயன்ற அளவு,  மக்களை நோய்த் தொற்றிலிருந்து  காத்திட வேண்டி அதனை எதிர்கொள்வதற்கான,  வேண்டிய தடுப்பு பொருள்களையும் , மக்களுக்கு வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் ,ஏழ்மையில் வாடும் அடித்தட்டு  மக்களுக்கான  நல உதவிகளையும் செய்து வருகிறார்கள்  என்பது நம் தமிழக மக்களின் சார்பில்  பாராட்டுக்குரியது. ஆனால்,    இந்தியாவில் இருக்கிற, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அதன் தலைவர்களோ, ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மதுபானக் கடை மூடலை ,நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரத்தை, ஆரோக்கியத்தை உயர்த்தவோ,   அறிவார்ந்த எதிர்கால இளைஞர் சமுதாயத்தை   உருவாக்க வேண்டும் என்றோ , யாரும் இது நாள் வரை யாதொரு  கருத்தோ ,அறிக்கையோ, பேட்டியோ  தெரிவிக்கவில்லை என்பதை அறிவார்ந்த ( அறிவு இருந்தால்தானே)  தமிழ்ச்சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நாஞ்சில்நாடனின் இடலாக்குடி ராசா

இடலாக்குடி ராசா  – நாஞ்சில் நாடன் கீழ்க்கண்ட நாஞ்சில்நாடனின் சிறுகதையை முழுக்க படித்தப் பிறகு, உங்களுக்கு நினைவில் எழும்பும் திரைப்படம் என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம். ‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம். ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும். ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் பலகை போல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்று போல் இருத்தி’ என்று எந்தச் சீதை வாழ்த்தினாளோ? என்றைக்குப் பார்த்தாலும் நாற்பது சொல்லும் உடல். ஆனால் கண்கள்? வெண்டிலேஷனுக்குப் போடும் நிறமில்லாத ஒளி ஊடுருவாத கண்ணாடி போல் ஒரு மங்கல். அல்லது வெளிறல். கண்களையே பேசும் மனம். பேச்சில் ஒரு வெடுக்கு. பெயரில் இடலாக்