தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில் அனைத்து ( திமுக வை திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ) அரசியல் இயக்கங்களும்,தன்னார்வலர்களும், அமைப்புகளும், சில பல நல்ல உள்ள கொண்டோரும் தங்களால் இயன்ற அளவு, மக்களை நோய்த் தொற்றிலிருந்து காத்திட வேண்டி அதனை எதிர்கொள்வதற்கான, வேண்டிய தடுப்பு பொருள்களையும் , மக்களுக்கு வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் ,ஏழ்மையில் வாடும் அடித்தட்டு மக்களுக்கான நல உதவிகளையும் செய்து வருகிறார்கள் என்பது நம் தமிழக மக்களின் சார்பில் பாராட்டுக்குரியது.
ஆனால்,
இந்தியாவில் இருக்கிற, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அதன் தலைவர்களோ, ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மதுபானக் கடை மூடலை ,நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரத்தை, ஆரோக்கியத்தை உயர்த்தவோ, அறிவார்ந்த எதிர்கால இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றோ , யாரும் இது நாள் வரை யாதொரு கருத்தோ ,அறிக்கையோ, பேட்டியோ தெரிவிக்கவில்லை என்பதை அறிவார்ந்த ( அறிவு இருந்தால்தானே) தமிழ்ச்சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும் மக்களை சிந்திக்கத் தெரியாத மாக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே ஏகமனதான எண்ணத்தின் காரணமாக , மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகிற , தனியார் மதுபான ஆலை உரிமையாளர்களை கொழிக்க வைக்கிற மதுக்கடையினை நிரந்தரமாக மூட வேண்டும் என்றோ ,அல்லது அதற்கான மாற்று வழிகளாக உள்ள மதுக்கடைகளை குறைப்பது குறித்தோ, குரல் கொடுக்காமல் தங்கள் விஷயத்தில் ( அரசியல் சுயநல நோக்குடன்) ஒற்றுமையாக தமது நவ துவாரத்தையும் கனக்கச்சிதமாக மூடிக்கொண்டு இருக்கிறார்கள் போலும்.
" பாரு" க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு
Comments
Post a Comment