அனைவருக்கு இனிய வணக்கம். அடியேன் இரண்டொரு நாட்களுக்கு முன்னர் ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போன்று படிப்பதை விட, இடது கையில் நூலைத் தாங்கி, வலக்கை நடுவிரலை நாவினில் தோய்த்து பக்கத் தாள்களை புரட்டியவாறு படிக்கிற நூல் வாசிப்பு என்பதே ஒரு வித தனி சுகானுபவம்தான், அதிலும் இலக்கிய நூல் என்றால் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கு பெருகத்தானே செய்யும். எல்லா காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய கருத்துக்களை தாங்கிய நீதி நூல்கள் இன்றும் சற்றே நம்மை மிரள வைக்கின்றன, விடயத்திற்கு வருகிறேன். தத்தனூர் எம்.ஆர் கல்லூரியில் தமிழிலக்கியம் படித்த காலத்தில் கனகராஜ் என்கிற வயதில் எம்மைவிட மூத்த, நெல்லைச்சீமையை சேர்ந்த நண்பர் எங்களோடு படித்து வந்தார் . அவரோடு நாங்கள் நட்பு கொள்கிற காலத்தில் அவரின் பேச்சு வழக்கு குறித்து அவரை நாங்கள் நையாண்டி செய்வோம். ஏளா!சுரேசு நீ எப்ப காலேஸி வருத? மாப்ளே இங்கனக்குள்ள வாலே ! சுரேசு என்னடே பண்ணுத! அந்த வாத்திமாரு கிளாசு கடுப்பா இருக்குலே! கோட்டிப்பய கணக்கா பொலம்புதான். படிச்ச பொறவு என்