Skip to main content

வாழ்க்கை

உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ ! 

பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன;

Have a child, Plant a tree, Write a book - Jose Marti

ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி

குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும்.
புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்த்துக் கொண்டு, மேம்பட்ட மனிதர்களாக வாழ்வார்கள். ஆங்கிலத்தில், Don't reinvent the wheel, என்று கூறுவார்கள். சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்காதே. சக்கரத்தை கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த காரணத்தினாலேயே, மனிதன் நாகரிகத்தில் மேன்மேலும் வளர்ந்தான். சக்கரம் கண்டுபிடிக்கும் அறிவானது, தலைமுறைகளுக்கு கிடைத்த காரணத்தால், அவர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.
இதனை, பெர்னாட்ஷா அழகாக விளக்குகிறார்.

“Life is no brief candle to me. It is a sort of splendid torch which I have got a hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations. - Bernard shaw

என்னைப் பொருத்தவரை, வாழ்க்கையானது குறுகிய காலம் வாழும் மெழுகுவர்த்தி அல்ல. நான் கண நேரம் பிடித்திருக்கும் வாய்ப்பளிக்கப்பட்ட, பிரகாசமான விளக்கு போன்றது. எதிர்கால தலைமுறைக்கு அதை கொடுப்பதற்கு முன்பு, அதை எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அவ்வளவு பிரகாசமாக எரியவைத்து, கொடுக்க விரும்புகிறேன். - பெர்னாட்ஷா

எனவே, ஒரு சராசரி மனிதன், அவனால் சமூகத்தில் எந்த ஒரு விஷயத்தை மேம்படுத்த முடியுமோ, மேம்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு, மேம்பட்ட சமூகத்தினை அளிப்பதற்கான தனது பங்கினை ஆற்ற வேண்டும்.


ஒரு தமிழாசிரியர், எளிதில் தமிழ் இலக்கணத்தை கற்பதற்காக புத்தகம் போடலாம். ஒரு கொத்தனார் சிலருடன் சேர்ந்து, நல்லதொரு சமுதாய கூடத்தை கட்டிக் கொடுக்கலாம். படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு கொடுக்கலாம்.

உண்ணும் உணவில் உலக ஒற்றுமை கண்டிடு.

உழைப்பால் பதில் உலகுக்கு தந்திடு - வேதாத்திரி மகரிஷி

ஒருவன் உண்ணும் உணவு, உலகிலுள்ள பல்வேறு மக்களின் உழைப்பால் வந்தது. மனிதனும் தனது உழைப்பால், உலகை உய்விக்க வேண்டும்.

ஒவ்வொரு சராசரி மனிதனும், தன்னால் இயன்ற உழைப்பின் மூலமாக, உலகினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயல வேண்டும். அவன் உண்ணும் உணவு, சமுதாயத்தினால் கிடைத்தது. அவன் உழைப்பின் மூலம், சமுதாயக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். சமுதாயத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும்.

நன்றி. சுரேஷ்மணியன் M A, 

( ப பி) 

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட