Skip to main content

துணியே அணியா சினி துறை

என் பதிவல்ல.மாபெரும்  திண்ணை இணைய இதழில் லதா ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு.

பாதிப்பில் மனதில் தவிர்க்க முடியாமல் மனதில் கிளர்ந் தெழுந்த சில கேள்விகள் கீழே.
இவற்றைப் பொதுவெளியில் வைத்தால் கையாலாகாதவர்களின், பொறாமை, பொச்சரிப்பாக வெகு எளிதாகப் பகுக்கப்படும் என்று நன்றாகவே தெரிந்தும் வாளாவிருக்க முடியவில்லை. என்ன செய்ய?
எழுத்தாளருக்கு மரியாதை செய்வதாய் பறையறி விக்கப்படும் விழாக்கள் கூட்டங்களிலெல்லாம் திரைப்படத்துறையினர் வந்தால் எழுத்தாளர்கள் ஓடிப்போய் அவர்களை அத்தனை விநயமாக வரவேற்பது கூட நம் வழிவழியான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?
தனக்காக நடத்தப்படும் இலக்கியக் கூட்டத்தில் தள்ளாமையை மீறி ஆர்வமாகக் கலந்துகொள்ளும் தரமான மூத்த எழுத்தாளரைப் பார்த்து மெலிதாக புன்முறுவலித்து அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கும் சராசரி சினிமாக்காரரை வரவேற்க வாயெல்லாம் பல்லாக விரைவதுதான் வழிவழியான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?
படைப்பாளி பேசப்பேச அதை சிறப்புப் பார்வையாள ராய் முன் வரிசையில் வீற்றிருக்கும் திரையுலகப் பிரமுகர் எப்படி கவனிக்கிறார் என்பதையே , மேடை யில் பேசுபவரும் சரி, அரங்கில் அமர்ந்திருக்கும் அவருடைய ‘விசேஷ வாசகப் பெருமக்களும் சரி’ வெளிப்படையாக வாயைப் பிளந்தவாறும், கடைக் கண்ணால் ஓரப்பார்வை பார்த்தவாறும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே யிருப்பதுதான் வழிவழி யான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?
இலக்கியக்கூட்டத்திற்கு வரும் தீவிர வாசகருக்கு அளிக்கப்படும் வரவேற்பைக் காட்டிலும் திரைப்படத் துறையில் முக்கியப்புள்ளியாக இருப்பவருக்கு (அல்லது அரசியல் துறையில் முக்கியப் புள்ளியாக இருப்பவருக்கு) அவர் ஒரு மேம்போக்கு வாசகரா கவே இருந்தாலும் – தரபப்டும் வரவேற்பு அதிகமாக இருப்பதுதான் வழிவழி யான மரபெனில் அந்த மரபு விரும்பத்தக்கதா? வெறுக்கத்தக்கதா?
ஒருமுறை இலக்கியக் கூட்டமொன்றுக்கு திரைப் படப் பாடலாசிரியரின் மனைவி வருகை தந்தபோது மேடையிலிருந்தோர் அனைவரும் அவருக்காக அப்படி எழுந்து நின்று உடல் வளைந்து கரங்கூப்பினார்கள்.
ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் அபத்த தொலைக்காட்சித் தொடர்களை இடையறாது தந்துகொண்டிருக்கும் நடிகை ஒருவர் வந்தபோது அவர் வருகை தந்ததே மேடையிலிருந்த படைப்பாளிகளுக்குக் கிடைத்த பெரிய ஆசிர்வாதம் என்பதாய் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்தவர் மைக்கில் பரவசத்தின் எல்லைக்கே போய் பக்திப்பெருக்கில் முழங்கினார்!
இப்படி நிறைய பார்த்தாயிற்று. இதில் திரைப்படத் துறையினரைக் குறைசொல்வதற் கில்லை. அரசியல்வாதியையும் குறைசொல்வதற்கில்லை. இலக்கியப் படைப்பாளி கள் பலருக்கும், இலக்கிய வாசகர்கள் பலருக்கும் திரைப்படத் துறையினரின் வரவும், அரசியல்வாதிகளின் பங்கேற்பும் ஒரு புளகாங்கிதத்தை ஏற்படுத்தி அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிடுகிறது. இது ஏனென்றே தெரியவில்லை.
வாழ்வாதாரத்திற்கு திரைப்படத்துறையை நாடுவது என்பது வேறு. ஆனால் சிறந்த இலக்கியப் படைப் பாளி(கள்) கலந்துகொள்ளும் விழாக்களில், அல்லது, இலக்கிய வாதிக்கு மரியாதை செய்வதாய் நடத்தப்படும் கூட்டங்களில் அவர் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு விழாவில் கலந்துகொள்ளும் திரைப்பட – அரசியல் பிரமுகரே / பிரமுகர்களே விழாநாயகர் களாக்கப்படுவது எவ்வகையில் சரி? இதற்கு இலக்கியவாதிகளும், இலக்கிய வாசகர்களும் ‘ஒத்துப் போவது’ எந்தவிதத்தில் சரி?
ஒரு திரைப்படம் வெளியானால் அதைப் பற்றி பல எழுத்தாளர்கள் ஒட்டியும் வெட்டியும் எழுதுகிறார்கள். அப்படி ஏதேனும் ஒரு (உண்மையிலேயே தரமான) கவிதைத் தொகுப்பையோ, சிறுகதைத் தொகுப்பையோ, நாவலையோ பேச எத்தனை திரைப்படத்துறையைச் சார்ந்த பெருந்தலைகள் முன்வருகிறார்கள்?
பெறு(ரு)ம் பணம் காரணமாக இலக்கியவாதிகளை விட தாம் மேலானவர்கள் என்ற நினைப்பு பல திரைப்படப் பிரமுகர்களிடம் (அரசியல் பிரமுகர் களிடமும்) வேரூன்றியிருப் பதாகவே தோன்று கிறது.
சமீபத்தில் மகளிர் தினச் சிறப்புநிகழ்ச்சியாக தினமணி பழம்பெரும் நடிகைகளுக்கு விருது வழங்கி் கௌரவித்தது. திரைப்படத்துறையில் பெண்கள் இரண்டாந்தரப் பிரஜை களாகவே நடத்தப்படுவது கண்கூடு. ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதில் நடிகைகளின் பங்களிப்பு அரிதாகவே பேசப்படுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனாலும், மகளிர் தினத்தன்று சாதனை மகளிராக தினமணி விருதளித்தது நடிகைகளுக்கு மட்டுமே என்ற போக்கு சரியா?
இப்படித்தான், நான்காவது தூணாக நிற்கும் அச்சு-ஒளி-ஒலி ஊடகங்களும் திரைப்படத்துறையையே பலவகையிலும் பிரதானப்படுத்திவருகின்றன. இந்தப் போக்கை இலக்கியவுலகிலும், குறிப்பாக இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது. வருத்த மளிக்கும் அவலம் இது.
எழுத்தாளர் ஜெயகாந்தனுடைய கதைகள் குறித்து, அவருடைய மொழிநடை குறித்து நமக்கு ஏற்பும் மறுப்புமாக சில கருத்துகள் இருக்கலாம். ஆனால், அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அவர்தான் நாயகர்! எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும் அவர்களும் சரி, விழாவிற்கு வந்திருப்பவர்களும் சரி அந்தப் படைப்பாளிக்காகவே வந்திருப்பார்கள். அவரிடம் பேசுவதற்காகவே காத்திருப்பார்கள். அதைப் பார்த்தாலே அத்தனை மனநிறைவாக இருக்கும்.
அதைப்போலவே, முன்பெல்லாம் சில தன்னார்வத் தொண்டர்களை கௌரவிப் பதற்காக, சில தொழிற் சங்கத் தலைவர்களுக்கு மரியாதை செய்வதற்காக நடத்தப் படும் விழாக்களில் சமூகத்தில் பெயர், புகழ் பண ரீதியாய் பெரும் செல்வாக்குள்ள வர்கள் கலந்து கொண்டாலும் அவர்களும் மற்ற பார்வையாளர்களைப் போல் இருக்கையில் அமர்ந்திருப்பார்களே தவிர அவர்கள் விழாநாயகர்களாக ஆகமாட்டார் கள்; ஆக்கப்பட மாட்டார்கள்.
ஆனால், இன்று அப்படியில்லை.
இன்றைய பொருள்பிரதான வாழ்க்கையில் (என்று தான் பொருள் பிரதானமாக இல்லை?) யார் வேண்டுமானாலும் இலக்கியவாதியை மட்டந்தட்டலாம்; மதிப்பழிக்கலாம் என்ற நிலையே நிலவுகிறது.
ஆனால், படைப்பாளிகளே அத்தகைய போக்கை முன்னெடுக்கலாகாது. அப்படிச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ’எனக்கு திரைப்படத்துறையினரின் பரிச்சயமுண்டு, அரசியல்வாதிகளின் பரிச்சயமுண்டு’ என்று காண்பித்துக்கொள்வதன் மூலமே தங்களை அதிகாரபீடங்களாக நிறுவிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
ஒருவகையில் எழுத்தாளர் ஞானியைக் காட்டிலும், தத்துவவாதியைக் காட்டிலும், ஆசான்களைக் காட்டிலும் மேலானவர். ஏனெனில் அவர் மற்றவர்களைப் போல் பீடத்திலிருந்துகொண்டு வாழ்க்கையை உபதேசிக்கவில்லை. சக மனிதராய் தன் வலி வேதனைகளை வாசகர் முன் வைக்கிறார். அவற்றி லிருந்து வாசகர் சுயமாகக் கற்றுக் கொள்கிறார்.
இத்தகைய அளப்பரிய சுதந்திரத்தை நமக்குத் தந்திருக்கும், காட்சிக்கு எளியரான, எழுத்தாளரை அவர் வாழுங்காலத்தில் மரியாதை செய்யாமல் இறந்தபின் அஞ்சலிக்கூட்டங்கள் ஆயிரம் நடத்தி (முடியுமானால் அவற்றிற்கும் தலைமை தாங்க திரைத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தரை – mostly mediocre – அழைத்து) என்ன பயன்?

எல்லாம் என் கேள்விகளே  ? 

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட