Skip to main content

சொல்லேருழவன்

வில்லேரருழவனும்,  சோல்லேருழவனும்.

           சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்,  அவன் பகைவனான மலையமானின் புதல்வர்களை யானைக்காலின் கீழ் கிடத்தி கொல்ல முயல்கிறான். தெருமன்றத்தில் வேடிக்கை காண மக்களும்  காத்து நிற்கின்றனர்.   மன்னனும் நிற்கிறான்.  யானையை விட்டு மிதிப்பதற்காக மலையமானின் குழந்தைகள் தரையிலே கிடத்தப்பட்டிருக்கின்றனர், எதிரே குன்றசைந்தாற் போன்று பட்டத்து யானையை பாகன் அழைத்து வருகிறான்,  மயான அமைதி அவ்விடத்தில் தம்மை மிதித்து கொல்ல வருவதையும் அறியா அம் மழலைகள் யானையை பார்த்து கை கொட்டி சிரிக்கின்றனர் . நெஞ்சை சுடும் இக்காட்சியை பார்த்த கோவூர்க் கிழார் எனும் பழந் தமிழ் புலவன் மன்னனை நோக்கி தன் கவி வாளை சுழற்றுகிறான்.

பாடல்
   
" நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே,புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம்  அழாஅல் மறந்த

புன்தலைச் சிறா அர் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கணநோ வுடையர்,
கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே !  

பொருள் -
(  மன்னனே நீ புறாவின் துயரத்தை மட்டுமல்ல,  மற்ற உயிர்களின் துன்பத்தையும் போக்கும் சோழர் குடியில் பிறந்தவன்.
இச்சிறுவர்களோ,  கற்றவர் பாடும் வறுமையை காணவே அஞ்சி மற்றவருக்கு பகுத்து கொடுத்து வாழும் பண்பான குடியில் பிறந்தவர்கள்.  தங்களை கொல்ல வந்து நிற்கும் யானையைக் கண்டும் கூட அஞ்சாமல் கை கொட்டி நிற்கும் இச் சின்னஞ் சிறுகுழந்தைகள் !  இப்பெரிய கூட்டதை பார்த்து பயந்து நிற்கின்றனர்  ( இத்தகைய பிள்ளைகளை நீ கொல்ல நினைக்கலாமா ? )  நான் கூற வேண்டியதை கூறிவிட்டேன் !  இனி உன் விருப்பப் ப செய்துகொள்    )
மன்னனும் தன் தவறுணர்ந்து குழந்தைகளை விடுவித்தான்  .
  அரசனாயினும் அதற்காய் பயம்கொள்ளாது அறிவுரை வழங்கிய புலவனே நீ வாழி! வாழி!

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட