மறிப மறியும் மலி்ர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவது உறுமென்று உரைப்பது நன்று
___ குண்டலகேசி
அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்தல் இயலாது)அவ்வாறே வளரும் விதியுடைய எல்லாமும் வளர்ந்தே தீரும் , (அவற்றை வளராமல் தடுக்க முடியாது)
பயன் பெறுகின்ற விதியுடைடையன பெற்றே தீரும் ,(அப்பயனைப் பெறாதவாறு செய்தல் இயலாது),
அதேபோல பெற்றபயனை இழக்கும் விதியுடைய அவற்றை இழந்தே தீரும், (இழக்கமுடியாதபடி செய்ய முடியாது )
ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர், தமக்குப் பொருளிழவு நேர்ந்ததே இது பொருளியல்பென் றுணர்ந்து அந்த இழப்பு பொருட்டு வருந்துதலிலர்.
அவ்வாறே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பதுமில ராவர்;
ஆதலால் “வருவது வந்தே தீரும்” என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொள்ளுங்கள் .
வணக்கம்
சுரேஷ்மணியன் M A ,
Comments
Post a Comment