சிந்தை சூழ் கம்பன்
கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர் MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும் ஆகும்.
கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன. என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை. நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன்.
கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது,
" பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!
சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்
போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!
அண்ணனொடு தம்பியர்கள்
நாலாகி ஐந்தாகி
ஆறேழு ஆனவிதம் கூறி - எனை
ஆளுகிறான் மூளைதனில் ஏறி! "
என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று.
அயோத்தியை விட்டு சீதையும் இராமனும் வனத்தில் இருந்தபோது, அத்தகைய துயரான அந்தச்சூழலின்போதும் கூட இராமனுக்கும் சீதைக்கும் இடையே கண்களால் ஒருவருக்கொருவார் நகைச்சுவை மொழியால் வெட்கப்படுகின்றனராம். அதாவது சோலையின் அருகே உள்ள நீர்நிலையில் உள்ள அன்னத்தின் நடையைக் கண்டு இராமன் சீதையைப் பார்த்து குறிப்பாய் புன்னகைக்கிறாராம், ( ஏய் அன்னமே மெல்லிடை கொண்ட என் ஏந்திழை சீதையின் நடையைப் பார்த்துதானே வெட்கப்பட்டு இவளுடைய நடைக்கு தாம் ஒப்பாகமாட்டோம் என்றுதானே கரையோரம் ஒதுங்கிச் செல்கிறாய் )
சீதைக்கு மிகவும் கூச்சம் கலந்த பெருமிதமான வெட்கம் வந்ததாம். உடனே அந்த சீதை அங்கே அவர்களைக் கடந்து சென்ற யானைக்கன்றைக் கண்டு சீதை ராமனைப் பார்த்து புன் முறுவல் பூத்தாளாம்.( அடடா இந்த ராமனின் தோள் வலிமைக்கு தாம் ஒப்பாக மாட்டோம் என்று அந்த யானைகள் அவ்விடத்தை விட்டு அகன்றதாம். )
பாடலை பாருங்கள்.
"ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டுவந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்புதியது ஓர் முறுவல் பூத்தாள்"
கம்பனை நினைத்து பார்க்கிறேன்
திகைத்து போகிறேன் .
அன்போடும் இலக்கியத்தோடும் : சுரேஷ்மணியன்.MA,
கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர் MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும் ஆகும்.
கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன. என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை. நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன்.
கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது,
" பத்தாயிரம் கவிதை
முத்தாக அள்ளிவைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்
வித்தாக வில்லையென்று பாடு!
சீதை நடையழகும்
ஸ்ரீராமன் தோளழகும்
போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்
போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!
அண்ணனொடு தம்பியர்கள்
நாலாகி ஐந்தாகி
ஆறேழு ஆனவிதம் கூறி - எனை
ஆளுகிறான் மூளைதனில் ஏறி! "
என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று.
அயோத்தியை விட்டு சீதையும் இராமனும் வனத்தில் இருந்தபோது, அத்தகைய துயரான அந்தச்சூழலின்போதும் கூட இராமனுக்கும் சீதைக்கும் இடையே கண்களால் ஒருவருக்கொருவார் நகைச்சுவை மொழியால் வெட்கப்படுகின்றனராம். அதாவது சோலையின் அருகே உள்ள நீர்நிலையில் உள்ள அன்னத்தின் நடையைக் கண்டு இராமன் சீதையைப் பார்த்து குறிப்பாய் புன்னகைக்கிறாராம், ( ஏய் அன்னமே மெல்லிடை கொண்ட என் ஏந்திழை சீதையின் நடையைப் பார்த்துதானே வெட்கப்பட்டு இவளுடைய நடைக்கு தாம் ஒப்பாகமாட்டோம் என்றுதானே கரையோரம் ஒதுங்கிச் செல்கிறாய் )
சீதைக்கு மிகவும் கூச்சம் கலந்த பெருமிதமான வெட்கம் வந்ததாம். உடனே அந்த சீதை அங்கே அவர்களைக் கடந்து சென்ற யானைக்கன்றைக் கண்டு சீதை ராமனைப் பார்த்து புன் முறுவல் பூத்தாளாம்.( அடடா இந்த ராமனின் தோள் வலிமைக்கு தாம் ஒப்பாக மாட்டோம் என்று அந்த யானைகள் அவ்விடத்தை விட்டு அகன்றதாம். )
பாடலை பாருங்கள்.
"ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச்சிறியது ஓர் முறுவல் செய்தான்;
மாது அவள்தானும், ஆண்டுவந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்புதியது ஓர் முறுவல் பூத்தாள்"
கம்பனை நினைத்து பார்க்கிறேன்
திகைத்து போகிறேன் .
அன்போடும் இலக்கியத்தோடும் : சுரேஷ்மணியன்.MA,
ரசிக்கும்படியான பதிவு.
ReplyDeleteநன்றி அய்யா
DeleteSuper
ReplyDeleteSuperb
ReplyDelete