Skip to main content

திருவள்ளுவரும் ஆண்ட்ராய்டு போனும்.


திருவள்ளுவர் ஓர் நாள் ஆறாயிரம் ரூபாய்க்கு
ஓர் ஆண்ராய்டு போனை வாங்கி
வொய்பை அழைத்து வைபை
முடுக்க சொல்லி
வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை தொடங்கி
குறளை பதிவிட்டு வந்தார்.

இவர் " நீரின்றி அமையாது உலகு " என்றார்
சட்டென்று ஒரு விடலை
" பீரின்றி அமையாது உலகெனச் (chat )சாட்டியது.

கோமான் என்பான் குறுக்கே வந்து
பெருசு  ,உடையார்கள்தான் அறிவாளிகளாக இருப்பார்களா ? என்றுச் (Chat )சாட்ட
உனக்கேன் இந்த அபத்தமான
ஐயம் என்று முறைக்கும் முக ஸ்டிக்கரை இவர் அனுப்ப,
"  அறிவுடையார் எல்லாம் உடையார் "
என நீதானே சொன்ன பெருசு என்று
நாக்கினை கடிக்கும் ஸ்டிக்கரையும் சேர்த்து அனுப்பினான்.

மீண்டும் வொய்பை அழைத்தார்
ஆண்ராய்டு அடுப்போடு சாம்பலாயிற்று
தாடியை நீவியவாறே
பனைமரம் நோக்கி போனார்.
----சு.சுரேஷ்மணியன். M A

Comments

  1. தற்போதைய சமூக நிலையை சரியாகக் கூறும் பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.