👇👇👇👇👇👇👇👇👇
விடிகாலைத் தீபாவளிக்கு
முன்னதாக
தன் தாத்தா
சில பத்து ரூபாய்களுக்கு வாங்கித் தந்த பட்டாசுகளை
விடியும் முன்
நூறு முறையேனும்
எடுத்து எடுத்துப் பார்த்து
ஆனந்தம் கொள்ளும்
ஓர் கிராமத்துச் சிறுவனைப் போல்
என் இதயத்தில் இருக்கும் உன்னை
அடிக்கடி
வெளியே எடுத்துப் பார்த்து
மகிழ்ச்சிக் கொள்கிறேன்.
....... கரிசல்நாடன்
Comments
Post a Comment