Skip to main content

மொக்கைப் படாதே


அனைவருக்கும். உங்கள் இனிய நண்பன் சுரேஷ் மணியனின் இராத்திரி வணக்கம் .

இன்றைய இலக்கியம் சார்ந்த கிறுக்கலை பார்க்கும் முன், ஒரு சின்ன கலாய்ப்பு.

இன்று நம்மில் , படித்த பல பேர் தமிங்கிலம் தான் பேசுகிறார்கள். சிலர் ஓரளவு தமிழ்நடையை பின்பற்றி பேசுகிறாகள். ஆனாலும் அதிகமான நபர்கள்  சில வார்த்தைகளை இம்மியளவேனும் பயன்படுத்துவதில்லை. அந்த வரிசையில் இன்றைய வார்த்தை 
"' இராத்திரி '' 
தமிங்கிலர்கள் பேசும் முறை  
1 .மார்னிங் என்ன சாப்பிட்ட?
2 .லன்ச்சுக்கு என்ன ஐட்டம்  எடுத்து வந்துருக்க.? 

ஓரளவு தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துவோர்  பேசும் முறை 

1 .காலையில என்ன சாப்பிட்ட.?
2.மதியம் சாப்பிட என்ன கொண்டு வந்துருக்க. ?

ஆனால் மேற்கண்ட இரு அணியும் சொல்லி வைத்தாற் போலும் பயன்படுத்தும் வார்த்தை 

நைட் என்ன டின்னர்  & சாப்பாடு ?

இராத்திரி எனும் வார்த்தை அவர்களுக்கு அருவருப்பு போல!

கிராமத்தில் மட்டுமே மேற்கண்ட இராத்திரி எனும் சொல் பல்வேறு முறைகளில்  புழக்கத்தில் இருக்கிறது.  Ex...
ராத்திரி சரியா தூங்கல ,
 ரவிக்கி வா , 
ராவுல என்ன சத்தம் 
இப்படியாக இராத்திரி எனும் சொல்லில் இருந்து சமஸ்கிருதத்தில் இரவை குறிக்கும்  '"ராத் Raath ''சொல் உருவானது.  பிறகு ராத் என்பது ஆங்கிலத்தில் Night ஆனது என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

மாலை பொதுக்கூட்டம் முடிந்து வீடு திரும்பிய தலைவர் கலைஞர் அவர்களிடம், அவரது சக நண்பர் "" ராத்திரிக்கு என்ன சாப்பாடு ? ''
என்று கேட்டாராம். உடனே காலைஞர் சொன்னாராம் இராத்திரிக்கு எண்ணெய் சாப்பாடு என்று கூறிவிட்டு போய்விட்டாராம்.  குழம்பிய நண்பருக்கு பிறகுதான் புரிந்ததாம் கலைஞரின் சிலேடை விளையாட்டு இராத்+திரி +எண்ணெய். !!!!!??????


மேட்டருக்கு வருவோமா ? பொறுக்க!!!
விடயத்திற்கு வருவோமா ?

இப்போது இரண்டு மூன்று ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத முனைப்பை திருக்குறள் ஆழ்ந்து நோக்குவதில் சிந்தை செல்கிறது.  காரணம் என்னவாக இருக்குமென எண்ணிப்பார்த்ததில் நான்  திருக்குறள் எனும் வார்த்தையை  அதிகம் பயன்படுத்தும் இடத்தில் இருப்பதாலோ என்ற வினாவும் எழுகிறது.எங்கள் நிறுவனத் தாளாளர் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்கள் சிறிய அளவிலான தவறு செய்தால் நூதன தண்டனையாக 50 குறளை பொருளுடன் ஒப்புவிக்கும்படி  சொல்வார்கள்.  ஒருவேளை அதுவும் கூட என்னில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். 

அடியேன் புதுக்கவிதைக்கான கவிதைக்கரு வேண்டி காமத்துப்பாலில் கவிதை தேடியதெல்லாம் கல்லூரி காலம். ஆனால் இன்று படிக்கும் எந்தவொரு குறளிலும் சிந்தை நங்கூரமிட்டு சில நிமிடங்கள் நகர மறுக்கிறது. 
  அந்த வகையில் சிந்தை நங்கூரமிட்டு நினைத்த மாத்திரமே சிரித்து மகிழ்ந்த "" அவையறிதல் '' தலைப்பிலான மூன்று குறள்களை பார்ப்போம் சிரிப்போம்.


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் ""குறள்  714 .

அறிவாளிகள் நிரம்பிய அவையில், மிகுந்த அறிவாளி என மற்றவர் பேசும்படி பேசு.  ஆனால் அறிவு குறைந்த கற்காதவரிடம் அவர்களை விட சாதாரண மனிதனாகப் பேசு  ''

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

குறள் 719:

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது.


புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

குறள் எண் 720 

தம் இனத்தவர் அல்லாதவரின் கூட்டத்தின்முன் ஒரு பொருள் பற்றிப் பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.


இந்த மூன்று குறளையும் பொருளையும் அதன் பொருளையும் படித்த பிறகு, சிந்தையில் தோன்றியதோ ஒரு திரைப்படத்தின் சில நிமிடக் காட்சிகளே . வள்ளுவர் கூறிய விடயம் புலனாயிற்று 

சிரித்து மகிழ்வோம் வாருங்கள் 

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மிக்ஸி காமெடி 


பெண்  ;மிக்ஸி ரிப்பேர்க்கு குடுத்தேனே சரியாச்சா ?  இல்லையா ?

வில்லேஜ் விஞ்ஞானி  : ஆக்சுவலா டிஸ்மாண்டல் பண்ணியாச்சு, ஆனா கார்பன் தேஞ்சுட்டதால, ஆரம்பிக்சர்ல Rbm ஸ்பீடு கம்மியாயிடுச்சு, So ventre furewell forcela ஒரு நல்ல வேரியேஷன் ....

பெண்  ; யப்பா?   அது இப்ப சுத்துமா ?  இல்லையா ?  


இப்படிதான் அவையறியாது பேசினால் மொக்கையாவீர். 

 ஹாஹாஹா 
தமிழோடு ; சுரேஷ்மணியன் M A, 

Comments

  1. திருக்குறள் வாசிப்பு வித்தியாசமான மாற்றத்தைத் தருவதறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட