உன்னைவிட்டு நான் பிரிந்திருந்த
காலமெல்லாம்
உன்னை நினைப்பேன் தெள்ளமுதே! என்னுயிரே! என்கிறேன்.
நீயோ !
மறந்தால்தானே நீ என்னை நினைக்க வேண்டும்
அவ்வாறெனில்
எனை அவ்வப்போது மறப்பாயோ ?
என்று எந்தன் தோளைத் தழுவாது
பொய்க்கோபம் கொள்கிறாயே !
உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றெம்மைப்
புல்லாள் புலத்தக் கனள்
(புலவி நுணுக்கம் .குறள் எண்:1316)
சுரேஷ்மணியன் M A,
கரிசல்நாடன் கவிதைக்குறள்.
Comments
Post a Comment