Skip to main content

தொல்காப்பியர் மன்றம்




தொல்காப்பியா் மன்ற தொடக்க விழா


எம்.ஆர்.கல்லூரியில் தொல்காப்பியா் மன்ற தொடக்க விழா
உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்காப்பியர் மன்ற தொடக்க விழா நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆலோசகர் முனைவர் தங்க.பிச்சையப்பா, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார்.
தமிழாய்வுத் துறை தலைவர் சாமிநாதன் மற்றும் மூத்த பேராசிரியர் பழனியாண்டி, கல்வியியல் கல்லூரி ஆலோசகர் வரதராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சுரேஷ் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் அ.சிவபெருமான் அவர்கள் தொல்காப்பியர் மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையில் தொல்காப்பியம் ஓர் அறிவியல் அளவிலான இலக்கணநூல், வணிகம் செய்கின்றவர்க்கம் இலக்கணம் சொன்ன நூல் எல்லோரும் கற்கவேண்டிய நூல்.
முதன் முதலாகத் தொல்காப்பியர் விருது பெற்றவர் அடிகளாசிரியர் ஆவார். அவருக்கு அப்போது வயது 100தாண்டியிருந்தது. தொல்காப்பியம் ஒரு தொகுப்பு நூல். ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது. ஏறக்குறைய1610 நூற்பாக்கள் கொண்டது என்றும் கூறினார்.
தொல்காப்பியத்தில் இடைச்சொற்கள் பற்றிய ஆய்வும் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பாக மாணவர்கள் தொல்காப்பிய ஆய்வு பற்றி பங்குகொள்ள வேண்டும். அதற்குப் பேராசிரியர்கள் உறுதுணையாக இருந்து உதவி செய்திடவேண்டும் என்று கூறினார். மேலும் பேராசிரியர் முனைவர் மு.இளையபெருமாள் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் இறுதியில் பேராசிரியர் முனைவர் கு.வேல்முருகன் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.