இன்று பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது போல் என் ஊரான சுத்தமல்லியில் ஜம்பது வருடங்களுக்கு முன்னால் தேசிய கீதத்திற்கு முன் ஒரு கிராம கீதம் பாடுவார்களாம்,
அந்த பாடலை என் தந்தை கூற கேட்டுள்ளேன். ஆனால் அந்த பாடலின் ஆசிரியன் யார் என தெரியவில்லை.
" எங்கள் ஊர் சுத்தமல்லி
விளையும் பயிர் கொத்தமல்லி
வடபாகத்தில் கருங்காடு
மேல்பாகத்தில் மணல் காடு
தென்பாகத்தில் செம்மண் காடு
கோடை நாளில் கொத்தி நிலத்தை சீர் செய்வோம்
ஆடி மாதம் விதைத்திடுவோம்
ஐப்பசிக்கு முன் அறுத்திடுவோம்
நாங்கள் பள்ளிக்கூடம் செல்லவே
பாலும் சோறும் உண்ணவே
எங்கள் அம்மா அப்பா காட்டிலே
அலுத்து அலுத்து உழைக்கின்றார்
எங்கள் ஊர் சுத்தமல்லி
விளையும் பயிர் கொத்தமல்லி.
இப்பாடலின் ஆசிரியர் யாரோ !!!
_______சுரேஷ் மணியன். M.A,
Comments
Post a Comment