வணக்கம் நான் உங்கள் நண்ப(ன்)ர் சுரேஷ் .
புதிய தமிழல்லாத சொற்கள் பற்றிய அறிஞர் நற்றவன் நூலை நேற்று முதல் படிக்கலானேன். அதன் எதிர் விளைவாக
நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் வித்தியாசமான சொற்கள் இலக்கியத்தில் இருக்கிறதா என்று ஆய்ந்து பார்த்தேன்.
அந்த வார்த்தைக்கான பின்னனி வரலாறு சற்றே பிரமிக்க வைக்கிறது.
போடா! பொறம்போக்கு . என்று யாரையாவது நாம் சொன்னால், எதிரே இருப்பவர் நம்மை சும்மா விடுவாரா ? ஆதரவற்ற, போதிய பாதுகாப்பற்ற நபரையும், அரசுக்கு சொந்தமான யாரும் ஆவண உரிமை கொண்டாட முடியாத நிலத்தை குறிப்பதாகும்.
அந்த பொறம்போக்கு என்ற வார்த்தை வரலாறு பற்றி அறிவோமா ?
பொறம்போக்கு என்பதற்குப் பின், ஒரு வரலாறு உள்ளது. அது, ஆங்கில வார்த்தை. அதாவது, 1800களில், இங்கிலாந்தில் இருந்து, பலர் தங்கள் நிலங்களை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று விட்டனர். லார்டு பென் புரோக் என்பவர், நிலங்களுக்கேற்ற வரி வசூலாகாததை விசாரித்து, ஆளில்லா நிலங்களை அரசு நிலமாக்க, 'பென் புரோக்' என்னும் சட்டத்தை இயற்றினார். அதேபோல, 1820களில், சென்னை மாகாண கவர்னராக இருந்த மன்றோ, ரயத்வாரி சட்டம் மூலம், மேய்ச்சல், காடு, கல்லாங்குத்து ஆகிய இடங்களை, பென் புரோக் சட்டத்தின் அடிப்படையில் அரசுடைமை ஆக்கினார். அரசு இடங்களில் குடியேறியவர்களை, 'பென் புரோக்' என அழைத்தனர். பின், அது, புறம்போக்கு என்று ஆகி, தகுதி இல்லாத, கேட்பதற்கு ஆளில்லாதவர்களை திட்டும் வார்த்தையாக புறம்போக்கு ஆகிவிட்டது.
சும்மா என்ற வார்த்தை எங்கே தொடங்கியது என்ற வரலாற்றை நாளை பார்க்கலாம்.
தமிழோடு உறவாடும். சுரேஷ் மணியன். M A,
பொறம்போக்கின் பின்புலம் அறிந்தேன்.
ReplyDelete