Skip to main content

வரலாறு பற்றி அதிகம் எமக்கு தெரியாவிட்டாலும், அதை அறிந்துகொள்ளவும், அதை மற்றவருக்கு தெரியப்படுத்தவும் அதிக ஆர்வமுண்டு. என்னுடைய பாட்டனார் ராஜகோபால் கொண்டியார் அதிக வரலாற்று நூல்களையே படிப்பார் அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு அந்த ஆர்வம் வந்துவிட்டது. எங்கள் ஊர் பெயர் சுத்தவல்லி சதூர்வேதிமங்கலம் ஆகும்.பிற்கால அதாவது முதலாம் இராஜேந்திர சோழனுக்கு பிறகான சோழப்பட்டத்தரசிகளில் ஒருவர் அது காலப்போக்கில் சுத்தமல்லி என ஆகிவிட்டது. எங்கள் ஊரில் ஒரு வரதராஜ பெருமாள் கோவில் ஒன்றுண்டு, கேட்பாரற்று ஒரே ஒரு பூட்டை மட்டுமே காவலாக கொண்டு இருந்த அந்தக் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகடத்தல் மன்னன் கபூர் பல சிலைகளை கடத்திவிட்டான். அவன் மியூசத்தில் வைத்திருந்த அந்த சிலைகள் நூறு கோடி வரை ஏலம் போயிருக்கிறது, ஆனால் வாங்குபவர்களுக்கு ஒரு தயக்கம், அந்தச்சிலையின் அடிபீடத்தில் சுத்தவல்லி என்ற பெயர் இருப்பதுதான். எவ்வாறோ கபூரும் பிடிபட்டான்! எங்கள் ஊர் சிலைகளும், ஹீபராந்தக சதூர்வேதி மங்கலம் என்கிற திருப்புரந்தான் விநாயகர் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் மீட்கப்பட்டு பிரதமர் மூலம் இந்தியா வந்தடைந்தனர். எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ( எனக்கு மூன்று ஆண்டுகள் முன்பே தெரியும் ) இப்படியான எங்கள் ஊர் சுத்தவல்லியில் திருவிழாக்களின் போது சில வகையறா என்கிற தலைக்கட்டு அதாவது குழுப்பெயரில் மண்டகப்படி நடத்துவர். அருள்மிகு காளியம்மன் சாமிக்கு நகை போடுவது ஒரு வகையறா, பூ அலங்காரம் சூடுவது, சாமிசிலை ஏற்பது, சாமியை தாங்கி பிடிப்பது, திருக்குடை பிடிப்பது எல்லைக்கிடா வெட்டுவது என ஒவ்வொரு வகையறாக்களுக்கும் ஒதுக்கப்படும். அந்த கோர்ட் உத்தரவுப்படியான ஆவணம் என் பாட்டனார் கைவசம் இருபது ஆண்டுகள் இருந்தது. இப்படியான ஒரு வகையறா பாலதரியன், அவர்களின் உண்மையான பட்டப்பெயர் அடியேன் ஆய்ந்த அளவில் சொல்கிறேன் " பல்லவர் திரையோன் " அடுத்து சம்பன் வகையறா , மகோன்னதமான சோழ வரலாற்றின் இடத்தை பிடித்த குறுநில மன்னர்களான. "சம்புவராயர்கள் வகையறா " அடுத்து "சீப்பிலி வகையறா " சீட்புலியார் குறுநில மன்னர் வகையறா " நான் சார்ந்த "கொண்டி" வகையறா, என்பது கொண்டியார் என்ற குறுநில மன்னரின் பட்டப்பெயராகும். _____வரலாறு நீளும். சுரேஷ்மணியன் MA,

கொண்டியார் வகையறா

Comments

  1. வரலாற்றின்மீதான ஆர்வம் கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. கொண்டியார் எந்த சமூகத்தில் வருவார்கள்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட