Skip to main content

பழமொழி

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா  .
   இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று,

 பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும்.  ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம்  கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட.

  வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும்  .
   வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க
 " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும்,

 ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின்
    " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும்.

   பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக்கும், நெல்லை, கொங்கு மண்டலத்து பழமொழிகள் சற்றே வித்தியாசம் நிறைந்தது.
         நாட்டார் பழமொழிகள், தென்னகத்து பழமொழிகள் என்று நிறைய பேர் பழமொழி மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, சேகரித்து  முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், நெல்லைப்பகுதியில் பழமொழியை சொலவம் என்றும் விளிப்பார்கள். எங்கள் மாவட்டமான அரியலூரிலும் எம்  ஊரான சுத்தமல்லியிலும்  சரி பழமொழி அவ்வளவேனும் அதிகம் இல்லை, அல்லது புழக்கத்தில் இல்லை  என்றே உணர்கிறேன்.
   சரி  முன்னர் நான் சொன்ன மேட்ருக்கு வருவோம்

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா !!!
  இந்த பழமொழியை, இன்று காலை தமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆக்டிங் கிளாஸ் போனபோது பழமொழி நானூறு எனும் பதிணெண் கீழ்க்கணக்கு நூல் மூலமாகத்தான் அறிய நேரிட்டது.
    அங்கே நான் ஆல் என்பதையும்
 பூல் என்பதையும்
எவ்வாறு ஆண், பெண் நிறைந்த அந்த வகுப்பில்  கையாண்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் சிந்தனையில் தொக்கி நிற்கும், உண்மையும் கூட.

ஆனால் ஆல் என்பது ஆலங்குச்சியையும்,
பூல் என்பது பூலாங்குச்சியையும் குறிப்பதாகும்.  விவராமாகவே சொல்லிவிடுகிறேன், பாடலை கடைசியில் தருகிறேன்.

ஒரு மன்னன் தான் சொல்வதை செய்வதெற்க்கென ஒரு பணியாளனை தன் அருகிலேயே, பணிக்கு அமர்த்திக் கொள்கிறான் எனில், அந்த மன்னன் தன் பணியாளனிடத்திலே இதோ எதிரிலே நிற்பவனை வேலின் மூலமாக குத்தி கொலை செய் என்றால், அந்த பணியாளன் தான் குத்தப்போகும்  எதிரே நிற்பவன் தனது உறவினன் என்பதால், தான் குத்தமாட்டேன் என்று மன்னனிடம் மறுத்து பேசுவானாயின் அவன் யாரைப் போன்றவன் என்றால், "ஆலங்குச்சியால் பல்துலக்கு என்றால், பூலாங்குச்சியால் பல்துலக்கு "என்று சொல்பவனை போன்றவன் ஆவான், இதை நான் சொல்லவில்லை அந்த நூலை எழுதிய மூன்றுரையனார் கூறுகிறார், அவர் கூறுவதையும் கொஞ்சமேனும் படியுங்களேன்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை - தமரவற்கு
வேலின்வாய் ஆயினும் வீழ்வார் மறுத்துரைப்பின்
ஆலென்னின் பூலென்னு மாறு.  

#என்னம்மா அங்க சத்தம் ?  ஒன்னும் இல்லே மாமா சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா  .

நன்றி மீண்டும் சந்திப்போம்  .   சுத்தமல்லி சுரேஷ்மணியன் MA, 

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட