பள்ளிக்கூடத்துல படிச்ச காலகட்டத்துல நம்மாள மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால்
" பள்ளிக்கூடத்துக்கு இன்சுபெக்சனுக்கு இன்ஸ்பெக்டர் ( ஆய்வாளர்) வந்து கேள்வி கேட்பாரே அதுதான்.
அன்றைக்கு மட்டும் எல்லா வாத்தியாருகளும் நேரத்துல வந்திடுவாங்க,எங்க ஊரு சுத்தமல்லி சின்ன பள்ளிக்கூடம் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்துச்சி, இலையெல்லாம் கீழே உதிர்ந்து சருகாகி கிடக்கும் அந்த சருகையெல்லாம் பசங்கதான் பொறுக்கனும், ஆளுக்கொரு சின்ன குச்சிய வச்சிக்கிட்டு வடைய கம்பியால குத்தி குத்தி எடுப்பாங்களே அது மாதிரி அந்த குச்சி நிறையும் குத்தி குத்தி எடுப்போம். பொம்பள பசங்க எல்லாம் க்ளாஸ் ரூமை கூட்டி பெருக்கிட்டு வகுப்பு ஆரம்பமானதும் நாங்க எல்லோரும் வாயில விரல வச்சி பொத்திகிட்டு அமைதியா உட்கார்ந்திருப்போம்.
அந்த அரச மரம் மட்டும் சலசலன்னு சத்தம் போடும், சமையல் ரூம் பக்கத்துல நாலு காக்காவும் சத்தம் போடும்.
புலி வருது, புலி வருது, எனும் கதையாக பன்னிரண்டு மணி அளவுல ஜீப்புல வருவாரு அந்த இன்ஸ்பெக்டரு.
அப்போ பள்ளிக்கூடமே நிசப்தமாக இருக்கும்.
அந்த நிசப்தத்தின் இடையே பள்ளிக்கூடத்து சமையல் கொட்டாயிலிருந்து சோயாபருப்புடன் முட்டைக்கோஸ் வேகும் போது அந்த குழம்பிலிருந்து ஒரு அபார வாசம் வருமே ! அடடா! அடடா ! தேவாமிர்தமாவது, மசிராவது, அப்படி கமகமக்கும்.
சரி விசயத்துக்கு வருவோம் இங்க இன்ஸ்பெக்டரு அதான் ஆய்வாளருக்கு நேர்ந்த கதிய பாருங்க.
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
அவரோட வேலை பாத்தவங்க
சொல்லி இருக்காங்க, அதனால எதுக்கும்
தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
உடனே பசங்க எல்லாம்
எழுந்திருச்சு நின்னாங்க.
சரி எதாவது கேள்வி கேக்க
வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி.....
"உன் பேர் சொல்லு" ன்னாரு
அவனும் "பழனி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி
"உன் பேர்
சொல்லு"ன்னாரு
அவனும் "மாரி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
சரி பசங்க வச்சி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச்
சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.
அன்போடு : சுரேஷ்மணியன்.
" பள்ளிக்கூடத்துக்கு இன்சுபெக்சனுக்கு இன்ஸ்பெக்டர் ( ஆய்வாளர்) வந்து கேள்வி கேட்பாரே அதுதான்.
அன்றைக்கு மட்டும் எல்லா வாத்தியாருகளும் நேரத்துல வந்திடுவாங்க,எங்க ஊரு சுத்தமல்லி சின்ன பள்ளிக்கூடம் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்துச்சி, இலையெல்லாம் கீழே உதிர்ந்து சருகாகி கிடக்கும் அந்த சருகையெல்லாம் பசங்கதான் பொறுக்கனும், ஆளுக்கொரு சின்ன குச்சிய வச்சிக்கிட்டு வடைய கம்பியால குத்தி குத்தி எடுப்பாங்களே அது மாதிரி அந்த குச்சி நிறையும் குத்தி குத்தி எடுப்போம். பொம்பள பசங்க எல்லாம் க்ளாஸ் ரூமை கூட்டி பெருக்கிட்டு வகுப்பு ஆரம்பமானதும் நாங்க எல்லோரும் வாயில விரல வச்சி பொத்திகிட்டு அமைதியா உட்கார்ந்திருப்போம்.
அந்த அரச மரம் மட்டும் சலசலன்னு சத்தம் போடும், சமையல் ரூம் பக்கத்துல நாலு காக்காவும் சத்தம் போடும்.
புலி வருது, புலி வருது, எனும் கதையாக பன்னிரண்டு மணி அளவுல ஜீப்புல வருவாரு அந்த இன்ஸ்பெக்டரு.
அப்போ பள்ளிக்கூடமே நிசப்தமாக இருக்கும்.
அந்த நிசப்தத்தின் இடையே பள்ளிக்கூடத்து சமையல் கொட்டாயிலிருந்து சோயாபருப்புடன் முட்டைக்கோஸ் வேகும் போது அந்த குழம்பிலிருந்து ஒரு அபார வாசம் வருமே ! அடடா! அடடா ! தேவாமிர்தமாவது, மசிராவது, அப்படி கமகமக்கும்.
சரி விசயத்துக்கு வருவோம் இங்க இன்ஸ்பெக்டரு அதான் ஆய்வாளருக்கு நேர்ந்த கதிய பாருங்க.
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்
வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய
அவரோட வேலை பாத்தவங்க
சொல்லி இருக்காங்க, அதனால எதுக்கும்
தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன
உடனே பசங்க எல்லாம்
எழுந்திருச்சு நின்னாங்க.
சரி எதாவது கேள்வி கேக்க
வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி.....
"உன் பேர் சொல்லு" ன்னாரு
அவனும் "பழனி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி
"உன் பேர்
சொல்லு"ன்னாரு
அவனும் "மாரி"ன்னான்
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு.
சரி பசங்க வச்சி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச்
சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.
அன்போடு : சுரேஷ்மணியன்.
Comments
Post a Comment