Skip to main content
இந்த படத்தை பார்க்கும்போது நம்முள் ஒரு மன நெகிழ் நிச்சயமாய் வரும். அதே சமயம் இதனை பார்க்கும் போது ஒரு சுவையான இலக்கிய நயமான செய்தி நினைவுக்கு வருகிறது .
அன்றாடம் நம் வீட்டில் பால் காய்ச்சும் போது அடுப்பை பற்ற வைத்து பானையில் பாலை ஊற்றி அதனோடு சிறிதளவு நீரையும் சேர்த்து பாலை காய்ச்சுகிறோம்.
ஏனெனில் வெறுமனே பாலை காய்ச்சி பருக முடியாது ,
ஏனெனில் அதனை பருகினால் நமக்கு செறிமானமும் ஆகாது ,
அப்போது நாம் பாலில் ஊற்றிய அந்த நீரை தன் நண்பனாக பால் ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டி மகிழ்கிறது.
அடுப்பில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பாலில் உள்ள நீரானது ஆவியாகி பானையை விட்டு வெளியேறும் போது,
பாலானது அய்யோ ! என் நண்பன் என்னை விட்டு போகின்றானே என்று , நண்பா ! என்னை விட்டு போகாதே என்று தன் நண்பனை பிடிக்க பானையின் மேலே நோக்கி பொங்கி வருகிறது.
பால் பொங்கி வருவதை பார்த்து நாம்  சிறிதளவு நீரை தெளித்ததும் ,அந்த பாலானது ஆகா!   என் நண்பன் மீண்டும் வந்து விட்டான் என்று பால் ஆசுவாசப்படுகிறதாம் .
மீண்டும் அடுப்பில் உள்ள நெருப்பானது வெப்பத்தை  அதிகரிக்க, மீண்டும் நீர் ஆவியாகி வெளியேற, இதனை கண்ட  பாலானது
ஏய் ! நெருப்பே நீதானே என் நண்பனை என்னை விட்டு பிரிக்க பார்க்கிறாய் என்று கோபமடைந்து பொங்கி அந்த நெருப்பை  அணைக்கிறதாம்.
அது போல இவர்கள் நட்பை யாரால் பிரிக்க முடியும்.
அன்போடு : சுத்தமல்லி சுரேஷ்.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.