இந்த படத்தை பார்க்கும்போது நம்முள் ஒரு மன நெகிழ் நிச்சயமாய் வரும். அதே சமயம் இதனை பார்க்கும் போது ஒரு சுவையான இலக்கிய நயமான செய்தி நினைவுக்கு வருகிறது .
அன்றாடம் நம் வீட்டில் பால் காய்ச்சும் போது அடுப்பை பற்ற வைத்து பானையில் பாலை ஊற்றி அதனோடு சிறிதளவு நீரையும் சேர்த்து பாலை காய்ச்சுகிறோம்.
ஏனெனில் வெறுமனே பாலை காய்ச்சி பருக முடியாது ,
ஏனெனில் அதனை பருகினால் நமக்கு செறிமானமும் ஆகாது ,
அப்போது நாம் பாலில் ஊற்றிய அந்த நீரை தன் நண்பனாக பால் ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டி மகிழ்கிறது.
அடுப்பில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பாலில் உள்ள நீரானது ஆவியாகி பானையை விட்டு வெளியேறும் போது,
பாலானது அய்யோ ! என் நண்பன் என்னை விட்டு போகின்றானே என்று , நண்பா ! என்னை விட்டு போகாதே என்று தன் நண்பனை பிடிக்க பானையின் மேலே நோக்கி பொங்கி வருகிறது.
பால் பொங்கி வருவதை பார்த்து நாம் சிறிதளவு நீரை தெளித்ததும் ,அந்த பாலானது ஆகா! என் நண்பன் மீண்டும் வந்து விட்டான் என்று பால் ஆசுவாசப்படுகிறதாம் .
மீண்டும் அடுப்பில் உள்ள நெருப்பானது வெப்பத்தை அதிகரிக்க, மீண்டும் நீர் ஆவியாகி வெளியேற, இதனை கண்ட பாலானது
ஏய் ! நெருப்பே நீதானே என் நண்பனை என்னை விட்டு பிரிக்க பார்க்கிறாய் என்று கோபமடைந்து பொங்கி அந்த நெருப்பை அணைக்கிறதாம்.
அது போல இவர்கள் நட்பை யாரால் பிரிக்க முடியும்.
அன்றாடம் நம் வீட்டில் பால் காய்ச்சும் போது அடுப்பை பற்ற வைத்து பானையில் பாலை ஊற்றி அதனோடு சிறிதளவு நீரையும் சேர்த்து பாலை காய்ச்சுகிறோம்.
ஏனெனில் வெறுமனே பாலை காய்ச்சி பருக முடியாது ,
ஏனெனில் அதனை பருகினால் நமக்கு செறிமானமும் ஆகாது ,
அப்போது நாம் பாலில் ஊற்றிய அந்த நீரை தன் நண்பனாக பால் ஏற்றுக்கொண்டு நட்பு பாராட்டி மகிழ்கிறது.
அடுப்பில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க பாலில் உள்ள நீரானது ஆவியாகி பானையை விட்டு வெளியேறும் போது,
பாலானது அய்யோ ! என் நண்பன் என்னை விட்டு போகின்றானே என்று , நண்பா ! என்னை விட்டு போகாதே என்று தன் நண்பனை பிடிக்க பானையின் மேலே நோக்கி பொங்கி வருகிறது.
பால் பொங்கி வருவதை பார்த்து நாம் சிறிதளவு நீரை தெளித்ததும் ,அந்த பாலானது ஆகா! என் நண்பன் மீண்டும் வந்து விட்டான் என்று பால் ஆசுவாசப்படுகிறதாம் .
மீண்டும் அடுப்பில் உள்ள நெருப்பானது வெப்பத்தை அதிகரிக்க, மீண்டும் நீர் ஆவியாகி வெளியேற, இதனை கண்ட பாலானது
ஏய் ! நெருப்பே நீதானே என் நண்பனை என்னை விட்டு பிரிக்க பார்க்கிறாய் என்று கோபமடைந்து பொங்கி அந்த நெருப்பை அணைக்கிறதாம்.
அது போல இவர்கள் நட்பை யாரால் பிரிக்க முடியும்.
அன்போடு : சுத்தமல்லி சுரேஷ்.
Comments
Post a Comment