நித்திரை பெண்ணாள் என்னை ஆரத் தழுவும் இந்த பின்னிரவில் திருக்குறளின் ஒரு காட்சி உள்ளுக்குள் நினைவுக்கு வந்து போகிறது எனக்கு. சில நூல்களை முன்னிருந்து பின்னோக்கி படிக்க வேண்டும், உதாரணத்திற்கு கலிங்கத்துப் பரணி. ஆனால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் கடைத் திறப்பை தள்ளி வைத்து விட்டு, காளி பாடியது, கோவில் பாடியது என பாடத்தை அமைப்பார்கள். திருக்குறள் அமைப்பு முறையும் நம்மவர்கள் அறம், பொருள், என அமைத்து விட்டு ஏனோ தானோ என இன்பத்துப் பாலை கடைசியாக பாடத்தில் வைப்பர்கள். குறள் என்றாலே, வள்ளுவர் என்றாலே வெறுமனே அறிவுரை சொல்லும் ஆசாமியாக மாணவர்கள் நினைக்கும் அளவிற்கு அது அமைந்து விடும் கலிங்கத்துப்பரணியின் கடை திறப்பை ஒரு கல்லூரி மாணவன் படித்தால் அவன் ஆயுள் முழுக்க ஜெயங்கொண்டாரை மறக்க மாட்டான் ஏனெனில் கடை திறப்பில் மிக அற்புதமான வர்ணனை நிறைந்து காணப்படும் அவன் வயதுக்கு கடைத் திறப்பை படிக்கின்ற போது ஜெயங்கொண்டாரை நினைத்து மிக மிக சந்தோஷப்படுவான். திருக்குறளின் 1121-வது குறளான "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" எனும் இன்பத் துப்பால் குறளுக்கு நம்மவர் சொல்லும் உ...
கொஞ்சம் மது தொட்டுக்கொள்ள உன் நினைவுகள், நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.