Skip to main content

திருக்குறள்

நித்திரை பெண்ணாள் என்னை ஆரத் தழுவும் இந்த பின்னிரவில் திருக்குறளின் ஒரு காட்சி உள்ளுக்குள் நினைவுக்கு வந்து போகிறது எனக்கு.

சில நூல்களை முன்னிருந்து பின்னோக்கி படிக்க வேண்டும், உதாரணத்திற்கு கலிங்கத்துப் பரணி. ஆனால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் கடைத் திறப்பை தள்ளி வைத்து விட்டு, காளி பாடியது, கோவில் பாடியது என பாடத்தை அமைப்பார்கள்.
திருக்குறள் அமைப்பு முறையும் நம்மவர்கள் அறம், பொருள், என அமைத்து விட்டு ஏனோ தானோ என இன்பத்துப் பாலை கடைசியாக பாடத்தில் வைப்பர்கள்.
குறள் என்றாலே, வள்ளுவர் என்றாலே வெறுமனே அறிவுரை சொல்லும் ஆசாமியாக மாணவர்கள் நினைக்கும் அளவிற்கு அது அமைந்து விடும் கலிங்கத்துப்பரணியின் கடை திறப்பை ஒரு கல்லூரி மாணவன் படித்தால் அவன் ஆயுள் முழுக்க ஜெயங்கொண்டாரை மறக்க மாட்டான் ஏனெனில் கடை திறப்பில் மிக அற்புதமான வர்ணனை நிறைந்து காணப்படும் அவன் வயதுக்கு கடைத் திறப்பை படிக்கின்ற போது ஜெயங்கொண்டாரை நினைத்து மிக மிக சந்தோஷப்படுவான்.

திருக்குறளின் 1121-வது குறளான "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" எனும் இன்பத் துப்பால் குறளுக்கு நம்மவர் சொல்லும் உரை 

மென்மையான மற்றும் பணிவான சொற்களைப் பேசும் இவளது வெண்மையான பற்களிடையே ஊறிவரும் உமிழ்நீரானது, பாலோடு தேன் கலந்தாற் போன்ற இன்சுவை உடையதாகும். காதலியின் இன்சொல்லும் அவளது இதழூறும் சுவையும் பால் கலந்த தேன் போன்றது என்று திருவள்ளுவர் இக்குறளில் வியந்துரைத்துள்ளார் என்பர்.

 ஏன் அறத்துப்பாலில் ஒரு தாய் அல்லது தந்தை தன்னுடைய அன்பிற்கினிய மகனுக்கோ மகளுக்கோ அவர்கள் குழந்தை பருவமாக இருக்கும்போது அவர்களின் அளப்பரிய குறும்பை பார்த்து அல்லது அறிவுத்திறனை பார்த்து முத்தம் இடும் போது இந்த காட்சியை நாம் அங்கு பொருத்திப் பார்க்க கூடாதா என்ன?

 அதுபோல் வயதான தன்னுடைய தந்தைக்கோ தாயையோ பார்த்து மகனோ மகளோ" நீ என்னை எவ்வாறெல்லாம் பெற்று உழைத்து இந்த நிலைமைக்கு நீ என்னை ஆளாக்கியுள்ளாய் என்று வியந்து அவர்களை முத்தமிடும் போது இந்த காட்சியை பொருத்தி பார்க்க கூடாதா என்ன?

அன்போடும் தமிழோடும்  ----- சு. சுரேஷ் மணியன் M. A,
01:25 AM 

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...