Skip to main content

க.சொ.க


திருமணம் நடக்கப் போகிறது அந்த இளம் பெண்ணுக்கு, அவளுடைய தாய் தன்னால் முடிந்த அளவு உழைத்த பணத்தைக் கொண்டு, தன் மகளுக்கு சீரும் சிறப்புமாக மணமுடித்து வைக்க தயாராகிறாள்  அந்த தாய்.  

 மணமேடையில்  மணமகன் ,மணமகளின் கழுத்தில்   மங்கல நாண் அணிவிக்கப் போகிறான். அந்தத் தாயோ மணமக்களுக்கு முன்னே, அருகிலோ நிற்க முடியாத சூழல். ஏனெனில் அந்தத் தாயின் கணவனோ  ஓராண்டுக்கு முன் மறைந்து விட்டார்.  அதனால் அவள் திருமணப்பந்தலுக்கு ,
வெளியே ஓர் புறத்திலே ,பக்கவாட்டில் வேயப்பட்ட கீற்றை விளக்கி அந்த நிகழ்ச்சியை கண்கள் கசிந்தவாறு, கண்ணார தன் மகளின் திருமணத்தை பார்த்தாளாம். இந்த நிகழ்வு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓரிடத்திலே அவரது " நெஞ்சுக்கு நீதி "நூலில் படித்திருக்கிறேன்.

அதே போல ,அதே சூழல்தான் ,தற்போது எனக்கும்,

பழூர் 03.03.2025 திங்கள் மாலை அ(இ)ன்று இந்நிகழ்ச்சி என்பதை கட்செவி புலனஞ்சல், முகநூலிலும் பார்க்கிறேன் அனைத்துப் பொறுப்பாளர்களின் பெயர்களைப்  ( Responsibility given by the party ) மாவட்டப் பிரதி என்ற சொல்லைப் படிக்கிற போது ஆண்டு 2010 க்கு சிந்தைக்குள்  பின்னோக்கிப் பார்க்கிறேன்.மனம்   செல்கிறது.
.
.
.
.
.
.
.
.
.
.
 
 .

 ஏனெனில் என்னை அதே கால கட்டத்தில்  கைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய், நம்   திமு கழகத்திலும் ,அப்போதைய  ஒருங்கிணைந்த தா.பழூர் ஒன்றிய செயலர் ,சட்டமன்ற உறுப்பினர்  அண்ணன்    க.சொ.க.கண்ணன்  அவர்களின் கரங்களையும், நம் அமைச்சர் பெருமகனார் மாண்புமிகு அண்ணன் சிவசங்கர் அவர்களின் கரங்களையும் இறுகப்  பற்றிக்கொள் !  பற்றிக்கொள் !
 என்று என்னை ஆற்றுவித்த,அரசியலை எனக்கு தோற்றுவித்த,  இடர்நேரும் போதெல்லாம்  ஆறுதல் சொன்ன, நன்னெறி பழக்கிவித்த ஒருங்கிணைந்த தா.பழூர் ஒன்றியத்தின் திமு கழக மாவட்ட பிரதிநிதிகளுள் ஒருவராக, மக்கள் தொண்டர் அய்யா அவர்களால்  தேர்ந்தெடுத்த ,பிறகு நம் அமைச்சர் அவர்களினால் ஒன்றி பொறுப்பாளராக பணியாற்றிய   எங்கள்  சித்தப்பா தா.பழூர் (மே) ஒன்றியத்தின் , மேனாள் ஒன்றிய பொறுப்பாளர்  சுத்தமல்லி  வா.சௌந்தரராஜன் 
அவர்கள் இப்போது கழகத்தினரின் அனைவரது  மனங்களில் மட்டுமே   மறையாமல் இருக்கிறார்.  

 ""அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் "" 

இந்த வரிகளின் உண்மையான அருத்தம் அடிக்கடி எனக்கு புலன்படுத்துவது,
 நீங்கள்  அல்லது நான் ஒருவரோடு  பழகியிருந்தாலும், பழகாதிருந்தாலும் நேரில் பார்க்காதவராயினும் நாம் அன்பு செலுத்திய ஒருவரைக் எங்கேயோ  காண நேரிட்டாலும் ,பார்க்க நேரிட்டாலும் ஒருமுறையாவது சில இனிய  வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். புன்னகையாலோ  ,   கண்களின்  மூலமாக சிரித்து கொள்ளுங்கள் .ஏனெனில் அந்த சந்திப்பு இருவரில் ஒருவருக்கு கடைசி சந்திப்பாக இருக்கலாம். இறுக்கமான வார்த்தைதான் ஆனால்   அந்த வலி இருக்கிறதே   !  பகைவனுக்கு கூட வரக்கூடாது என்றே நினைப்பேன். 

காலங்களே மனதிற்கு  மருந்து .

அற்றைத் திங்கள்  
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்

எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;

இற்றைத் திங்கள் .....



MRC சுரேஷ் MA,



https://www.facebook.com/share/p/18tyZdmf6y/?mibextid=oFDknk 

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட...