Skip to main content

அவளுக்கு

மறுபிறவியிலேனும் 
மனைவியாக வாய்ப்பளா ?
என் முதல்காதலி 
    அவள் நினைவுகளை 
சுமந்து சுமந்து 
நெஞ்சம் நோகிறது 

புகைப்படத்தைப் பார்த்து பார்த்து 
கண்கள் கசிகிறது 

வடக்கில் இருந்து வரும் 
வாடைக்காற்றோ 
வாட்டித் தொலைக்கிறது 

ஒற்றை மாடு பூட்டப்பட்ட 
வண்டிகாரன் நிலையில் 
வாழ்ந்து கழிக்கிறேன் 
இருந்து அல்ல.

Comments