Skip to main content

தமிழ்

10.48மணிக்கு நியூஸ் தமிழ் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருந்தேன் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தன்னை காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணோடு விமானத்தில் இறங்கி வருவதை அறிந்து அவர்களுடன் தகராறு ஈடுபட்டார் அந்த பெண்மணி. இந்நிகழ்வை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அல்லது கேட்டபோது எனக்கு சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் படித்ததால் அநேக வேலைகளில் கேட்கும் ஏதோ ஒரு செய்திகள் அல்லது பார்க்கும் ஒரு காட்சிகள் எனக்கு திடீரென சங்க இலக்கியத்தை நினைவூட்டும் ஏனென்றால் நான் தமிழ் படித்த ஒரு சுரேஷ்


“பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்

உவக்காண் தோன்றும்...”


( அகநானூறு- 4 )

தன்னுடைய காதல் அதாவது தலைவன் வினைபொருட்டு அதாவது பணம் ஈட்டுவதற்காக அல்லது அல்லது அரசனுக்கு போரின் பொருட்டு உறுதுணையாக ஒரு துணையாக தன்னுடைய காதலியாகிய தன்னுடைய தலைவியை அவன் பிரிந்து சென்று விட்டான்‌.
மீண்டும் அவன் வரும் காலத்தை நினைத்து என்று? வருவான் .எப்போது வருவான்? என்று நினைத்து காத்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு அவளது தோழி பின்வருமாறு கூறி ஆற்றுப்படுத்துகிறாள்
அதாவது, சோலையில் தன் துணையோடு இன்புற்றிருக்கும் வண்டு, தேன்
உண்ணும் போது, அவை தன் தேர்மணியோசைக்கு பயந்து விடுமோ என்றஞ்சி, மணியின் நாவை ஓசை எழாத வண்ணம் இழுத்துக்கட்டும் மாண்புடையவனா
ம்    அந்தத்தலைவன். அப்படிப்பட்டவன் உன்னை தவிக்கவிட்டு வாராதிருப்பானா? விரைவில் வந்துவிடுவான் என்கிறாள் தோழி அந்த தலைவியிடம் அதாவது அந்த பெண்ணிடம்.

அதாவது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த மொழியான தமிழ் மொழியில் ஒரு இலக்கியத்தில் தன்னுடைய காதலியை காண வரும் அந்த தலைவன் தான் வருகின்றபோது தேரில் இருக்கக்கூடிய மணி நாவானது அந்த மணியில் அசைந்தால்  ஓரு ஓசை வரும் என்று அங்கே மனதில் நினைத்தான் தேன் அருந்தி கொண்டிருந்த  கொண்டிருக்கும் அந்த வண்டுகள் அதாவது இணையான ஜோடி வண்டுகள்  பிரியக்கூடாது என்று எண்ணி தன்னுடைய தேரின் நாவை கட்டிக்கொண்டு வரக்கூடிய அந்த மாண்பு அந்த அத்தகைய தலைவன் வாழ்ந்திருக்கிறான் அல்லது வந்து கொண்டிருக்கிறான் எனவே உன்னை காண்பான் என்று தோழியே அறிந்து அதனை தன்னுடைய தலைவிக்கு சொல்கிறாளே அந்த மாண்பை நினைக்கின்ற போது தற்காலத்தில் காதலித்து அல்லது காதலிக்கின்ற போது திருமணம் செய்த பிறகு அல்லது திருமணம் நடக்கின்ற பொழுது தன்னுடைய துணையை திடீரென கழற்றிவிட்டு வேறு ஒருவரை காதலிக்கவும் அல்லது திருமணமும் செய்யக்கூடிய ஒரு தமிழ் மகன் அல்லது தமிழ் மகளை பற்றிய செய்திகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

சுரேஷ் மணியன்M A, (alias )கரிசல் நாடன்

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...