Skip to main content

Posts

புளியமரம்

கரையோர புளியமரம் எங்க ஊரு ஆண்டேரிக் கரையோரம்  எங்களுக்கோ !   இரண்டு வீட்டுக்கும் பொதுவான ஒரு புளியமரம். முப்பாட்டன் வச்ச மரம்  மூன்றுத் தலைமுறையின்  காலடித்தடம் பட்ட இடம் குளிக்க வரும்  சிறுசுகளால்  புளிப்பான பழத்துக்காய்  கல்லடி பட்ட மரம்.  தாடிவீட்டுப் படித்துறை கரையோரம்  செழிப்போடு வளர்ந்த மரம் இடுப்பழகி நடிகை போல கொஞ்சம்  கிழக்கு நோக்கி அது  சாஞ்சிருக்கும் . பொன்னிறமாய் பூ பூக்கும்  பார்ப்போர் ரெண்டு கண்ணும் அந்த அழகில்  சொக்கி நிற்கும்  பூவோடு சேர்ந்த இளம்பிஞ்ச கடைவாயில் கடிச்சாக்க நாவரும்பு புளிப்பாலே வெட்கப்படும்  பூ கொஞ்சம்,பிஞ்சாகி , வந்த பிஞ்சு கொஞ்சம் காயாகி , காயில் கொஞ்சம் பழமாகி , அறுவடைக்கு காத்து நிற்கும் அந்த அறுவடை திருநாளுக்காய்  பொடுசுக நாங்க காத்திருப்போம் . சின்ன அப்பாயி தலைமையில  சொந்தகார குட்டாறு பெரியப்பா புளியம்பழம் உலுக்கையில  ரெண்டு சணல் கோணி கொண்டு போவோம் விழும் பழம் பொறுக்கிப்போட நாலு சின்னக்கூடையும் கொண்டு போவோம் . உலுக்கிய பழம் சேகரித்து  முட்டாக கொட்டி வைப...

களவும் கற்று மற

களவும் கற்று மற.! திருட்டையும்  கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ?   நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை.  பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை  இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது.  முன்னது ( திருமணத்திற்கு  முன் ) களவு வாழ்க்கை , பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை.   மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு  தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்ப...

தாத்தாவுக்கு

சரியாக நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.......என் தாத்தா தமிழ் நாவல்கள் நிறைய படிப்பார், அவர் புத்தகம் படிக்கும் போது தொந்தரவு செய்தால் 50 பைசா அல்லது 1 ரூபாய் கொடுத்து என்னை வெளியேற்றுவார்,,,, இப்படியே தினமும் என் வருமானம் 2 ரூபாயை எட்டிவிடும்... பிற்கால சோழர்களின் எழுச்சியை இரவு நேரத்தில் கதையாக கூறுவார்,,,96 விழுப்புன் பெற்ற விசயாலய சோழன்,, திருப்புறம்பிய போரில் பாண்டியரை விரட்டியடித்தது,, இப்படியாக சுவைபட கூறுவார். அவரின் படுக்கையருகில் புத்தகங்கள் நிறைய இருக்கும்,,ஒருநாள் நான் "கோபல்ல கிராமத்து மக்கள் " என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், அந்நாவலை படிக்க படிக்க சுவையாக இருந்தது,,,,அக்கதையும் மனதில் பதிந்து விட்டது,, கல்லூரியில் நான் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை ,,அப்போதும் அவர் என்னிடம் கேட்ட புத்தகம் "கலைஞரின் "பொன்னர் சங்கர் " நானும் ஒரு நண்பரிடம் வாங்கி தந்தேன்,,அதை 2 நாளில் படித்து முடித்தார்,,,இன்னும் என்ன புத்தகம் உள்ளது என்று கேட்டார்,,நான் உடனே தலைவரின் "சங்கத்தமிழ் ...

தமிழா ! தமிழா

எந்த வேலைப் பொழப்பும் இல்லை என்றால் மட்டுமே தமிழையும், அதன் ஆதிகாலத்திய இலக்கிய இலக்கணம் தொடங்கி, தற்காலத்திய வரையிலான நூல்களை படிக்க வேண்டும். ஏனெனில் ஒற்றை தமிழ் சொல்லின் விரிவு பலவாறனாதாக விரிந்து கொண்டே செல்லும். எதனால் கூறுகிறேன் என்றால் ? எந்த வேலைப் பொழப்பும் இல்லை என்றால் மட்டுமே தமிழையும், அதன் ஆதிகாலத்திய இலக்கிய இலக்கணம் தொடங்கி, தற்காலத்திய வரையிலான நூல்களை படிக்க வேண்டும். ஏன் சொல்கிறேன் ?  எப்படி   சொல்கிறேன் என்றால் ? வாங்க படிக்கலாம்  நம் தமிழர்கள் பயன்படுத்திய,  நீர்நிலைகளும்  அவற்றுக்கான பெயர்களும். 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு 04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி. 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம். 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ஊருணி -(Drinking water...

படித்ததில் பிடித்தது.

சமீபத்தீல்  ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன். கம்பெனிக்காரர்கள் நல்லவர்கள் போலும்  அதில் சில சிப்ஸ்களையும்  போட்டிருந்தனர்.  ###BINGO

சுத்தமல்லி,புளியங்குழி

அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர்  நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி.  ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம்.   கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும்.  சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திர...

ஆலம்பள்ளம்

 எங்கள் ஊர் சுத்தமல்லி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயர் ஆலம்பள்ளம். பொதுவாக அந்த ஊருக்கு உள் நுழையும் முன் மிக சரிவான பள்ளத்தில் இறங்குவது போன்ற நிலவியல் அமைப்பு இன்றும் இருக்கிறது. ஒரு வேளை ஆள் உயர பள்ளம் (அ)ஆல் உயர பள்ளம் அதாவது ஆலமர உயர அளவு பள்ளம் என்பதே இவை மருவி ஆலம்பள்ளம் என வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.  --------+-சுரேஷ் மணியன் M.A,