Skip to main content

தீர்ப்பு

               "" தீர்ப்பு ''


பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த  ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள  தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த  மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு,            " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு  குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும்  ஆண்டேரிக்கரை  மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண  படையாச்சி.  

 அந்த ஊரு பிறை நிலா வடிவான  தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில்  குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது.  ஏரிக்கு  வடமேற்கே அரசமரம் பக்கத்தில்  உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ?  அந்த குளியல்  துறைக்கு மேற்கு பக்கத்தில்  மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இருந்ததால் இடுகுறி பெயராக அனைத்து துறையும் பரிமளித்திருந்தது .  அதுக்கு நேர் கிழக்கே உள்ள துறை மாது ஊட்டு துறை, அதுக்கு அடுத்து கொழுந்து ஊட்டு துறை, அடுத்து வில்லு ஊட்டு துறை, அதிலிருந்து கிழக்கே  தெற்கு நோக்கியதான கரையில் முதலாவது " தாடி ஊட்டு துறை ' அடுத்து " சீப்பிலி ஊட்டு துறை ' என ஊரார் பெயரிட்டு சொல்லி வந்தனர்.  

 ஏரியினுள்ளே  கட்டியிருந்த வேட்டியோடு ,படர்ந்து கிடக்கும் தாமரை கொடிகளை இரு கைகளாலும் ஒதுக்கியவாறே இடுப்பளவு தண்ணீர் வரை உள்ளே போய் தலையை முங்கி எழுந்து ;கழுத்துப்பட்டை ,முதுகுபக்க அழுக்குகளை  விரல்களால் தேய்த்து குளித்து எழுந்து கரையோரம் சுருட்டி வைத்த பச்சைத்துண்டை இடுப்பில் கட்டியவாறு, வேட்டியை அவிழ்த்து நாலு அலசு அலசி முறுக்கிப் பிழிந்து உதறி, முதுகில் போர்த்தி அந்தி வெயிலில் வேட்டியை காயவைத்தவாறே கிழக்கே போகும் ஒற்றைத் தார் ரோட்டில்  பொடிநடையாக  வீடு வந்து சேர்ந்தார் கிருஷ்ண படையாச்சி . 


தொடரும் ........

கரிசல்நாடன் M.A,

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...