Skip to main content

பாருக்குள்ளே நல்ல நாடு

தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )   அரசியல் இயக்கங்களும்,தன்னார்வலர்களும், அமைப்புகளும், சில பல நல்ல உள்ள கொண்டோரும் தங்களால் இயன்ற அளவு,  மக்களை நோய்த் தொற்றிலிருந்து  காத்திட வேண்டி அதனை எதிர்கொள்வதற்கான,  வேண்டிய தடுப்பு பொருள்களையும் , மக்களுக்கு வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் ,ஏழ்மையில் வாடும் அடித்தட்டு  மக்களுக்கான  நல உதவிகளையும் செய்து வருகிறார்கள்  என்பது நம் தமிழக மக்களின் சார்பில்  பாராட்டுக்குரியது.

ஆனால்,
   இந்தியாவில் இருக்கிற, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அதன் தலைவர்களோ, ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மதுபானக் கடை மூடலை ,நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரத்தை, ஆரோக்கியத்தை உயர்த்தவோ,   அறிவார்ந்த எதிர்கால இளைஞர் சமுதாயத்தை   உருவாக்க வேண்டும் என்றோ , யாரும் இது நாள் வரை யாதொரு  கருத்தோ ,அறிக்கையோ, பேட்டியோ  தெரிவிக்கவில்லை என்பதை அறிவார்ந்த ( அறிவு இருந்தால்தானே)  தமிழ்ச்சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள  அனைத்து  அரசியல் இயக்கங்களும்  மக்களை சிந்திக்கத் தெரியாத மாக்களாக வைத்திருக்க  வேண்டும் என்ற ஒரே ஏகமனதான  எண்ணத்தின் காரணமாக , மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகிற , தனியார் மதுபான ஆலை உரிமையாளர்களை கொழிக்க வைக்கிற  மதுக்கடையினை  நிரந்தரமாக மூட வேண்டும் என்றோ ,அல்லது அதற்கான மாற்று வழிகளாக உள்ள மதுக்கடைகளை குறைப்பது குறித்தோ,  குரல் கொடுக்காமல் தங்கள்   விஷயத்தில் ( அரசியல் சுயநல நோக்குடன்)   ஒற்றுமையாக தமது நவ துவாரத்தையும் கனக்கச்சிதமாக மூடிக்கொண்டு இருக்கிறார்கள் போலும்.

" பாரு" க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.