Skip to main content

பாருக்குள்ளே நல்ல நாடு

தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )   அரசியல் இயக்கங்களும்,தன்னார்வலர்களும், அமைப்புகளும், சில பல நல்ல உள்ள கொண்டோரும் தங்களால் இயன்ற அளவு,  மக்களை நோய்த் தொற்றிலிருந்து  காத்திட வேண்டி அதனை எதிர்கொள்வதற்கான,  வேண்டிய தடுப்பு பொருள்களையும் , மக்களுக்கு வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் ,ஏழ்மையில் வாடும் அடித்தட்டு  மக்களுக்கான  நல உதவிகளையும் செய்து வருகிறார்கள்  என்பது நம் தமிழக மக்களின் சார்பில்  பாராட்டுக்குரியது.

ஆனால்,
   இந்தியாவில் இருக்கிற, குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கிற எந்த ஒரு அரசியல் இயக்கமோ, அதன் தலைவர்களோ, ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மதுபானக் கடை மூடலை ,நிரந்தரமாக மூடி மக்களின் வாழ்வாதாரத்தை, ஆரோக்கியத்தை உயர்த்தவோ,   அறிவார்ந்த எதிர்கால இளைஞர் சமுதாயத்தை   உருவாக்க வேண்டும் என்றோ , யாரும் இது நாள் வரை யாதொரு  கருத்தோ ,அறிக்கையோ, பேட்டியோ  தெரிவிக்கவில்லை என்பதை அறிவார்ந்த ( அறிவு இருந்தால்தானே)  தமிழ்ச்சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள  அனைத்து  அரசியல் இயக்கங்களும்  மக்களை சிந்திக்கத் தெரியாத மாக்களாக வைத்திருக்க  வேண்டும் என்ற ஒரே ஏகமனதான  எண்ணத்தின் காரணமாக , மக்களின் பொருளாதாரத்தை சுரண்டுகிற , தனியார் மதுபான ஆலை உரிமையாளர்களை கொழிக்க வைக்கிற  மதுக்கடையினை  நிரந்தரமாக மூட வேண்டும் என்றோ ,அல்லது அதற்கான மாற்று வழிகளாக உள்ள மதுக்கடைகளை குறைப்பது குறித்தோ,  குரல் கொடுக்காமல் தங்கள்   விஷயத்தில் ( அரசியல் சுயநல நோக்குடன்)   ஒற்றுமையாக தமது நவ துவாரத்தையும் கனக்கச்சிதமாக மூடிக்கொண்டு இருக்கிறார்கள் போலும்.

" பாரு" க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...