Skip to main content

கொரோனா ( கொ.பி. )

வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது
ட்டுடுக் ட்டுடுக்  என 
ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்

    முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல
தரைக்கு முத்தமிட்டு
விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கும்

வெற்றிலை குதறிய வாய்களை போல கரிவாயுவை உமிழ்ந்தவாறே
கனரக வாகனங்கள் இரையத் தொடங்கும்

   கதைகளில்
கவிதைகளில்
திரைப்படங்களில் பட்டிமன்றங்களில்
திண்ணைகள் என
கொரோனா பேசுபொருளாகி
கடந்துவந்ததை அசை போட்டு பார்க்க வைக்கும்

ஆறுகளின் கர்ப்பத்தை அழித்து
மணல் குருதிகள் அள்ளும்  வேலைகள் மீண்டும் தொடங்கும்

   திருமண வீடுகளிலும் ,இன்னபிற நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளோடு, மாஸ்க்கும் தரப்படலாம்

ரெய்ன் கோட்டுகளைப் போல
கொரோனா கோட்டும்
கடையின் வாசல்களில் தொங்கலாம்

   அடுத்தவரின் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவனுக்கு
"கொரோனா " எனவும் பட்டப்பெயர் சூட்டலாம்

கொரானா காலத்துல கூட
இம்புட்டு வெலை விக்கில
"இப்போ இம்புட்டு வெலையா ?
என ,ஏதோ ஒரு சந்தையில்
கிராமியப் பெண்ணின் குரலை  கேட்க நேரிடலாம்

    " ஊரு ஒலகத்துல கொரானாவா வந்திருக்கு"
பொழுதுக்கும் ஊட்டுலியே அடைஞ்சி கிடக்குற
என , எந்தவொரு வேலைக்கும் செல்லாதவர்களை பார்த்து
வீட்டுப் பெண்கள் அடுப்படியிலிருந்தவாறே புலம்புவதையும் கேட்கலாம்

ஆள் நடமாட்டமில்லாத சாலைகளை ,தெருக்களை
"கொரோனா காலத்து ......களை போல "
என உவமைகள் புதியனவாகவும் மாறலாம்

   சினிமாப் பாடல்களில் "கொரோனா  " பல்லவியிலோ, சரணத்திலோ கண்டிப்பாக வந்து போகலாம்

ஊரை அடித்து தன் உலையில் போடுபவனை ,
"கொரோனா வந்து பாடையில போக "
என வசை மொழிகள் மாறலாம்

   " நான் சின்ன வயசா இருக்குறப்போ
கொரோனா ன்னு ஒரு நோய் வந்து "

என இன்றிலிருப்பவர் யாரோ
தன் பேரக்குழந்தைக்கு கதையாகவும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

        இப்படியாக
கொரோனாக் காலம் என்பது     வலிகளையும் ,சுகங்களையும் தாங்கி               கடந்த காலமாகும்.
                   சுரேஷ்மணியன். M ,A

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.