Skip to main content

பழமொழி

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா  .
   இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று,

 பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும்.  ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம்  கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட.

  வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும்  .
   வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க
 " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும்,

 ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின்
    " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும்.

   பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக்கும், நெல்லை, கொங்கு மண்டலத்து பழமொழிகள் சற்றே வித்தியாசம் நிறைந்தது.
         நாட்டார் பழமொழிகள், தென்னகத்து பழமொழிகள் என்று நிறைய பேர் பழமொழி மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, சேகரித்து  முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், நெல்லைப்பகுதியில் பழமொழியை சொலவம் என்றும் விளிப்பார்கள். எங்கள் மாவட்டமான அரியலூரிலும் எம்  ஊரான சுத்தமல்லியிலும்  சரி பழமொழி அவ்வளவேனும் அதிகம் இல்லை, அல்லது புழக்கத்தில் இல்லை  என்றே உணர்கிறேன்.
   சரி  முன்னர் நான் சொன்ன மேட்ருக்கு வருவோம்

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா !!!
  இந்த பழமொழியை, இன்று காலை தமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆக்டிங் கிளாஸ் போனபோது பழமொழி நானூறு எனும் பதிணெண் கீழ்க்கணக்கு நூல் மூலமாகத்தான் அறிய நேரிட்டது.
    அங்கே நான் ஆல் என்பதையும்
 பூல் என்பதையும்
எவ்வாறு ஆண், பெண் நிறைந்த அந்த வகுப்பில்  கையாண்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் சிந்தனையில் தொக்கி நிற்கும், உண்மையும் கூட.

ஆனால் ஆல் என்பது ஆலங்குச்சியையும்,
பூல் என்பது பூலாங்குச்சியையும் குறிப்பதாகும்.  விவராமாகவே சொல்லிவிடுகிறேன், பாடலை கடைசியில் தருகிறேன்.

ஒரு மன்னன் தான் சொல்வதை செய்வதெற்க்கென ஒரு பணியாளனை தன் அருகிலேயே, பணிக்கு அமர்த்திக் கொள்கிறான் எனில், அந்த மன்னன் தன் பணியாளனிடத்திலே இதோ எதிரிலே நிற்பவனை வேலின் மூலமாக குத்தி கொலை செய் என்றால், அந்த பணியாளன் தான் குத்தப்போகும்  எதிரே நிற்பவன் தனது உறவினன் என்பதால், தான் குத்தமாட்டேன் என்று மன்னனிடம் மறுத்து பேசுவானாயின் அவன் யாரைப் போன்றவன் என்றால், "ஆலங்குச்சியால் பல்துலக்கு என்றால், பூலாங்குச்சியால் பல்துலக்கு "என்று சொல்பவனை போன்றவன் ஆவான், இதை நான் சொல்லவில்லை அந்த நூலை எழுதிய மூன்றுரையனார் கூறுகிறார், அவர் கூறுவதையும் கொஞ்சமேனும் படியுங்களேன்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை - தமரவற்கு
வேலின்வாய் ஆயினும் வீழ்வார் மறுத்துரைப்பின்
ஆலென்னின் பூலென்னு மாறு.  

#என்னம்மா அங்க சத்தம் ?  ஒன்னும் இல்லே மாமா சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா  .

நன்றி மீண்டும் சந்திப்போம்  .   சுத்தமல்லி சுரேஷ்மணியன் MA, 

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...