Skip to main content

பழமொழி

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா  .
   இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று,

 பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும்.  ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம்  கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட.

  வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும்  .
   வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க
 " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும்,

 ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின்
    " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும்.

   பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக்கும், நெல்லை, கொங்கு மண்டலத்து பழமொழிகள் சற்றே வித்தியாசம் நிறைந்தது.
         நாட்டார் பழமொழிகள், தென்னகத்து பழமொழிகள் என்று நிறைய பேர் பழமொழி மற்றும் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வு செய்து, கள ஆய்வு மேற்கொண்டு, சேகரித்து  முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள், நெல்லைப்பகுதியில் பழமொழியை சொலவம் என்றும் விளிப்பார்கள். எங்கள் மாவட்டமான அரியலூரிலும் எம்  ஊரான சுத்தமல்லியிலும்  சரி பழமொழி அவ்வளவேனும் அதிகம் இல்லை, அல்லது புழக்கத்தில் இல்லை  என்றே உணர்கிறேன்.
   சரி  முன்னர் நான் சொன்ன மேட்ருக்கு வருவோம்

நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா !!!
  இந்த பழமொழியை, இன்று காலை தமிழ்த்துறை முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆக்டிங் கிளாஸ் போனபோது பழமொழி நானூறு எனும் பதிணெண் கீழ்க்கணக்கு நூல் மூலமாகத்தான் அறிய நேரிட்டது.
    அங்கே நான் ஆல் என்பதையும்
 பூல் என்பதையும்
எவ்வாறு ஆண், பெண் நிறைந்த அந்த வகுப்பில்  கையாண்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் சிந்தனையில் தொக்கி நிற்கும், உண்மையும் கூட.

ஆனால் ஆல் என்பது ஆலங்குச்சியையும்,
பூல் என்பது பூலாங்குச்சியையும் குறிப்பதாகும்.  விவராமாகவே சொல்லிவிடுகிறேன், பாடலை கடைசியில் தருகிறேன்.

ஒரு மன்னன் தான் சொல்வதை செய்வதெற்க்கென ஒரு பணியாளனை தன் அருகிலேயே, பணிக்கு அமர்த்திக் கொள்கிறான் எனில், அந்த மன்னன் தன் பணியாளனிடத்திலே இதோ எதிரிலே நிற்பவனை வேலின் மூலமாக குத்தி கொலை செய் என்றால், அந்த பணியாளன் தான் குத்தப்போகும்  எதிரே நிற்பவன் தனது உறவினன் என்பதால், தான் குத்தமாட்டேன் என்று மன்னனிடம் மறுத்து பேசுவானாயின் அவன் யாரைப் போன்றவன் என்றால், "ஆலங்குச்சியால் பல்துலக்கு என்றால், பூலாங்குச்சியால் பல்துலக்கு "என்று சொல்பவனை போன்றவன் ஆவான், இதை நான் சொல்லவில்லை அந்த நூலை எழுதிய மூன்றுரையனார் கூறுகிறார், அவர் கூறுவதையும் கொஞ்சமேனும் படியுங்களேன்.

எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை - தமரவற்கு
வேலின்வாய் ஆயினும் வீழ்வார் மறுத்துரைப்பின்
ஆலென்னின் பூலென்னு மாறு.  

#என்னம்மா அங்க சத்தம் ?  ஒன்னும் இல்லே மாமா சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா  .

நன்றி மீண்டும் சந்திப்போம்  .   சுத்தமல்லி சுரேஷ்மணியன் MA, 

Comments