tag:blogger.com,1999:blog-40443273518220180112024-03-06T00:43:59.109-08:00கரிசல்நாடன்sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-87281403443851033842024-03-06T00:43:00.001-08:002024-03-06T00:43:27.167-08:00படித்ததில் பிடித்தது. சமீபத்தீல் <div>ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன்.</div><div>கம்பெனிக்காரர்கள் நல்லவர்கள் போலும் </div><div>அதில்</div><div>சில</div><div>சிப்ஸ்களையும் </div><div>போட்டிருந்தனர். </div><div><br></div><div>###BINGO</div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-37614519681929085022022-01-10T23:33:00.003-08:002022-01-10T23:45:28.827-08:00சுத்தமல்லி,புளியங்குழி <div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjVYQTy58udM-1z-tQsfCO6xBtOWwcPBWsiflQHw5xHMtFn02NbtyhhCLF2KMVU8c5vnnPzxf4JflpsXXdnRDGLD5KEhGd7-psqR--XxHoyj8pbTOKixmoTUADv3TaH5ALXEFLIxvk2hUa2kD9oA3lYkrvJ5Cs2fTXmAh8kgn7CesdtRpXfae2WcNly=s1371" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="1371" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjVYQTy58udM-1z-tQsfCO6xBtOWwcPBWsiflQHw5xHMtFn02NbtyhhCLF2KMVU8c5vnnPzxf4JflpsXXdnRDGLD5KEhGd7-psqR--XxHoyj8pbTOKixmoTUADv3TaH5ALXEFLIxvk2hUa2kD9oA3lYkrvJ5Cs2fTXmAh8kgn7CesdtRpXfae2WcNly=s320" width="168" /></a></div><br />அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர் நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி. ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம். </div><div>கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும். சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரிக்காடுகளும் அதிகம்.</div><div>அதே போல் இன்றைய நாட்களில், கடலை, முருங்கை,காய்கனிகள் மிகுதியான அளவில் விளைவிக்கப்படுவதால் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது .</div><div><br /></div><div>புளியங்குழி </div><div><br /></div><div>நம்மில் அநேகம் பேர் மற்றவர் கூறினார் என்பதற்காக அந்த வார்த்தையை, பெயரை வழி வழியாக பேசி வருகிறோம். அந்த சொல்லின் பொருள் என்ன? ஏன் அப்படி அழைத்தார்கள்? அழைக்க காரணம் என்ன.? என்று யோசிப்பதில்லை. நம்மில் அநேகருடைய பெயர் கண்டிப்பாக தமிழில் இல்லை. ஏழை வீட்டு கத்தரிக்காய் குழம்பில் எங்கோ ஒன்றிரண்டு காணப்படும் காய்த்துண்டுகளைப் போல தமிழ் பெயர்கள் காணலாகிறது. ஊர்ப் பெயரும் அவ்வாறே. ஆரியர்களாலும், ஆங்கிலேயர்களாலும், நம்மவர்களாலும் சிதைக்கப்பட்டன,மாற்றமாயின. புளி+அம் +குழி =புளியங்குழி </div><div>புளிய மரங்கள் சூழ்ந்த அழகிய ,இனிய நீர்நிலை குழி எனலாம் </div><div><br /></div><div>படத்தில் காட்டப்பட்டுள்ள </div><div>இரண்டாவதுநீர்நிலைதான் பதினைந்து ஆண்டுக்கு முன்வரை குடிநீராக பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வூர் தோன்றிய நாள் முதல் இன்றுவரை அந்த நீர்நிலையை சுற்றி புளிய மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது..... </div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-35420749291623250032022-01-10T19:58:00.001-08:002022-01-10T19:58:25.409-08:00ஆலம்பள்ளம் <p> எங்கள் ஊர் சுத்தமல்லி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயர் ஆலம்பள்ளம். பொதுவாக அந்த ஊருக்கு உள் நுழையும் முன் மிக சரிவான பள்ளத்தில் இறங்குவது போன்ற நிலவியல் அமைப்பு இன்றும் இருக்கிறது. ஒரு வேளை ஆள் உயர பள்ளம் (அ)ஆல் உயர பள்ளம் அதாவது ஆலமர உயர அளவு பள்ளம் என்பதே இவை மருவி ஆலம்பள்ளம் என வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன். </p><p><br /></p><p>--------+-சுரேஷ் மணியன் M.A,</p>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-32801375240704880462021-10-22T02:29:00.001-07:002021-10-22T02:29:38.521-07:00களவும் கற்று மற <div>களவும் கற்று மற.!</div><div><br></div><div>திருட்டையும் கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா</div><div>ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ? </div><div>நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை. பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது. </div><div><br></div><div>முன்னது ( திருமணத்திற்கு முன் )</div><div>களவு வாழ்க்கை ,</div><div>பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை. </div><div><br></div><div>மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்படுவது இல்லற வாழ்க்கை. </div><div><br></div><div>சரி மேட்டருக்கு வருவோம். </div><div>ஒரு ஆண் களவு வாழ்க்கையினை ஒரு பெண்ணோடு மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும். களவு முடிந்து கற்பு என்கிற இல்லற வாழ்க்கைக்கு வந்த பிறகு ,களவை மறந்து விட வேண்டும். அப்படி மீறியும் போனால் " சொல்வதெல்லாம் உண்மை " டிவி யில வந்துடுவ. </div><div><br></div><div>கனிவோடும் தமிழோடும்</div><div> ___ கரிசல்நாடன் (Alias)சுரேஷ் மணியன். M. A,</div><div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-51290274646946382232021-07-30T11:11:00.001-07:002021-07-30T11:11:25.078-07:00நான் ஏன் தமிழ் படித்தேன்? <div>நான் ஏன் தமிழ் படித்தேன் ?</div><div><br></div><div>எதனால் தமிழ் பாடத்தை தேர்வு செய்தேன் ?</div><div><br></div><div> இது போன்ற இன்ன பிற கேள்விகளும் தூக்கமில்லா இரவுகளில் எனக்குள் நானே எழுப்பி கொள்வதுமுண்டு. </div><div><br></div><div>அப்போ நான் பத்தாவது படிக்கறச்சே, கேபிள் கனெக்ஷன் கிராமத்தை எட்டிப் பார்க்காத அந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி சேனல் மட்டுமே வாய்த்தது.</div><div><br></div><div>ஞாயிறு மாலை மட்டுமே திரைப்படம் போடும் முன்னதாக, வசந்த் &கோ நிறுவனம் வழங்கும் " சாப்பிடலாம் வாங்க " என்கிற சமையல் நிகழ்ச்சியின் முடிவில் சமைத்த பதார்த்தங்களை உண்டு ருசி பார்த்து பரிசு தர வருவார் அமரர் வசந்தகுமார் அவர்கள். அப்போது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் வசந்தகுமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார் . </div><div><br></div><div>நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகாவிட்டால், வேறு என்னவாக ஆகியிருக்க ஆசைப்பட்டிருப்பீர்கள் ? என்று,</div><div><br></div><div>வசந்தகுமார் கூறினார் " நான் தமிழ் படித்து ஒரு தமிழ் பேராசிரியராக ஆகியிருப்பேன், எனக்கு கம்பனின் ராமகாதை மிகவும் பிடிக்கும் ராமன் நாடு துறந்து காடேகும் நிகழ்வை கம்பர் பாடுவார் </div><div><br></div><div><br></div><div>சீரை சுற்றித் திருமகள் பின்செல,</div><div>மூரி விற்கை இளையவன் முன்செல,</div><div>காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்</div><div>ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? </div><div><br></div><div>இந்த கம்பனின் ராமகாதையை கவிஞர் வாலி அவர்கள் அவதாரப்புருஷன் என்கிற தலைப்பில் வசன கவிதை நடையில் எழுதியுள்ளார் .மேற்கண்ட பாடலை கவிதை வடிவில் எழுதுகிறார் </div><div><br></div><div>கங்கைக் கரையில் </div><div>காலைக் கருக்கலில் </div><div>கொழுநன் முன்செல </div><div>கொழுந்தன் பின்வர </div><div>இருவர்க்கும் இடையில் </div><div>ஒரு கொழுந்து வெற்றிலை எழுந்து நடந்தாற் போல் </div><div>நடந்தால் </div><div>மரவுரி இடையில் ஏந்திய ஏந்திழை சீதை. " </div><div><br></div><div>என்று பதில் கூறினார். </div><div><br></div><div>ஆக இதுபோன்ற உளிகள்தான் பாராங்கல்லாய் இருப்பவனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியது,கம்பனை நோக்கி வழிகாட்டியது, எனலாம் .</div><div><br></div><div>சுரேஷ் மணியன் M, A.</div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-43661918195100699042021-07-19T10:04:00.001-07:002021-07-19T10:04:08.936-07:00தாங்கல், தாங்கல் <div>ஏந்தல், தாங்கல், என்ற இரு சொற்களின் பொருளறிவோம் </div><div>அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது .</div><div><br></div><div>ஆனாலும் இரு சொற்களும் நீர்நிலையை குறிக்கும் சொல்லாகும். </div><div><br></div><div>மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை உடைய நீர் நிலை ஏந்தல் ஆகும்.உடையார்பாளையம் அருகே உள்ள இடையாறு பக்கம் உள்ள ஏரிக்கு அருகே உள்ள ஊரின் பெயர் ஏந்தல் ஆகும். ஏரியின் பெயரே ஊர்ப்பெயராகவும் ஆயிற்று.</div><div><br></div><div>தாங்கல் என்பது அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் அல்லது ஆற்று நீரை சேமிக்கும் நீர் நிலையின் பெயரே தாங்கல் ஆகும் .தாங்கலேரி எனும் பெயர் கொண்ட ஏரி தத்தனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நீர்நிலையின் பெயர் தாங்கலேரி என்பதாம். </div><div><br></div><div><br></div><div><br></div><div>ஆக ஏந்தல், என்பதும், தாங்கல் என்பதும் நீர்நிலையின் பெயராகும். </div><div><br></div><div><br></div><div>ஆய்ந்தறிவீர் தமிழ் மறவீர்!</div><div><br></div><div>இப்படிக்கு - சுரேஷ் மணியன் M.A,</div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-83593588631340830242021-06-08T22:55:00.001-07:002021-06-08T22:55:36.897-07:00வாழ்க்கை<div>உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ ! </div><div><br></div><div>பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன;</div><div><br></div><div>Have a child, Plant a tree, Write a book - Jose Marti</div><div><br></div><div>ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி</div><div><br></div><div>குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.</div><div><br></div><div>மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும்.</div><div>புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்த்துக் கொண்டு, மேம்பட்ட மனிதர்களாக வாழ்வார்கள். ஆங்கிலத்தில், Don't reinvent the wheel, என்று கூறுவார்கள். சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்காதே. சக்கரத்தை கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த காரணத்தினாலேயே, மனிதன் நாகரிகத்தில் மேன்மேலும் வளர்ந்தான். சக்கரம் கண்டுபிடிக்கும் அறிவானது, தலைமுறைகளுக்கு கிடைத்த காரணத்தால், அவர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.</div><div>இதனை, பெர்னாட்ஷா அழகாக விளக்குகிறார்.</div><div><br></div><div>“Life is no brief candle to me. It is a sort of splendid torch which I have got a hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations. - Bernard shaw</div><div><br></div><div>என்னைப் பொருத்தவரை, வாழ்க்கையானது குறுகிய காலம் வாழும் மெழுகுவர்த்தி அல்ல. நான் கண நேரம் பிடித்திருக்கும் வாய்ப்பளிக்கப்பட்ட, பிரகாசமான விளக்கு போன்றது. எதிர்கால தலைமுறைக்கு அதை கொடுப்பதற்கு முன்பு, அதை எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அவ்வளவு பிரகாசமாக எரியவைத்து, கொடுக்க விரும்புகிறேன். - பெர்னாட்ஷா</div><div><br></div><div>எனவே, ஒரு சராசரி மனிதன், அவனால் சமூகத்தில் எந்த ஒரு விஷயத்தை மேம்படுத்த முடியுமோ, மேம்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு, மேம்பட்ட சமூகத்தினை அளிப்பதற்கான தனது பங்கினை ஆற்ற வேண்டும்.</div><div><br></div><div><br></div><div>ஒரு தமிழாசிரியர், எளிதில் தமிழ் இலக்கணத்தை கற்பதற்காக புத்தகம் போடலாம். ஒரு கொத்தனார் சிலருடன் சேர்ந்து, நல்லதொரு சமுதாய கூடத்தை கட்டிக் கொடுக்கலாம். படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு கொடுக்கலாம்.</div><div><br></div><div>உண்ணும் உணவில் உலக ஒற்றுமை கண்டிடு.</div><div><br></div><div>உழைப்பால் பதில் உலகுக்கு தந்திடு - வேதாத்திரி மகரிஷி</div><div><br></div><div>ஒருவன் உண்ணும் உணவு, உலகிலுள்ள பல்வேறு மக்களின் உழைப்பால் வந்தது. மனிதனும் தனது உழைப்பால், உலகை உய்விக்க வேண்டும்.</div><div><br></div><div>ஒவ்வொரு சராசரி மனிதனும், தன்னால் இயன்ற உழைப்பின் மூலமாக, உலகினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயல வேண்டும். அவன் உண்ணும் உணவு, சமுதாயத்தினால் கிடைத்தது. அவன் உழைப்பின் மூலம், சமுதாயக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். சமுதாயத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும்.</div><div><br></div><div>நன்றி. சுரேஷ்மணியன் M A, </div><div><br></div><div>( ப பி) </div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-90086686872560853412021-06-01T08:49:00.003-07:002021-06-01T08:58:19.579-07:00மக்களோடு நான் _ நூலில் <div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuoVioeBqWyd8LWVJsSL2OOU_eeJCp5ycYWMSmooYxs2AtKbXUle_CdGq5j6oeRnaQ8O9CluMkh9Wz9g7a-y6IerZuMcb3q3tNt_B6a-4iwxS95HKh1kJFXDlWpuQyqtiNdlzLhM0eHMM/s720/FB_IMG_1622558447309.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="720" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuoVioeBqWyd8LWVJsSL2OOU_eeJCp5ycYWMSmooYxs2AtKbXUle_CdGq5j6oeRnaQ8O9CluMkh9Wz9g7a-y6IerZuMcb3q3tNt_B6a-4iwxS95HKh1kJFXDlWpuQyqtiNdlzLhM0eHMM/s320/FB_IMG_1622558447309.jpg" width="320" /></a></div><br />எனது நேரடி பார்வையில் படும் விதமாக வைத்துள்ள எனது புத்தக அலமாரியில் நம் மாண்புமிகு அமைச்சர் . S. S. S அண்ணனின் " மக்களோடு நான் " நூல் நடுநாயகமாக வைத்திருப்பேன். மாதம் ஒரு முறையேனும் சில பகிர்வுகளைப் படித்து பல மேன்மக்களின் ஆளுமைப்பண்புகள் குறித்து வியப்பதுண்டு. </div><div><br /></div><div><br /></div><div> ஆலத்தூர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களைப் பற்றி, நம் அண்ணன் மாண்புமிகு. அமைச்சர் அவர்கள்</div><div> " மக்களோடு நான் " நூலில் குறிப்பிட்டுள்ள ஹாஸ்யமான பகிர்வும் பதிவும் இதோ </div><div><br /></div><div><br /></div><div>" எங்க அண்ணன் ஒருத்தர் இருக்கார். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. குன்னம் தொகுதியில் உள்ள ஆலத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் . ஏழு முறை ஒன்றியச் செயலாளர் .உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி.மக்களின் அன்பைப் பெற்றவர். </div><div><br /></div><div>அவர் எல்லோரையும் அண்ணன்னுதான் கூப்பிடுவார், தன்னை விட வயது குறைந்தவர்களையும். முன்னாள் ( இந்நாள்) அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களின் மச்சினர். </div><div><br /></div><div><br /></div><div>ஒரு முறை, மீன்வளத் துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி அவர்கள் எங்கள் பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தாரு. அவரை வரவேற்று அண்ணன் கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்தோ ' வாங்க அண்ணே ' அப்படின்னாரு. அவரு நெளிஞ்சுகிட்டே `என்னண்ணே உங்க வயசுக்கு என்னை அண்ணன்னு கூப்புடுறிங்க ' ன்னாரு. `அது பழக்கமாயிடுச்சிண்ணே ' அப்படின்னாரு நம்ம அண்ணன்.</div><div><br /></div><div>சாமி `என்னை அப்படி கூப்புடாதீங்கண்ணே 'ன்னு சொல்ல, நம்ம அண்ணன் அதுக்கும் 'சரிண்ணே 'ன்னு பதில் சொல்ல, அமைச்சர் சாமியால் சிரிப்பை அடக்க முடியல. அண்ணனும் சிரிச்சிட்டாரு. அப்ப நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி பத்தி ஒரு செய்தி எங்க பக்கத்தில உண்டுன்னு சொல்லி 'அதைச் 'சொன்னேன். மந்திரியும் கூட வந்தவங்களும் சிரிச்சி சிரிச்சி ஓய்ஞ்சு போனாங்க. </div><div><br /></div><div>அப்புறம் திராவிடர் கழகத் தலைவர் சுற்றுப்பயணம் வந்தபோது, ' கிருஷ்ணமூர்த்தி ரொம்ப மரியாதையானவரா இருக்காரே 'ன்னு கேட்க, அய்யாகிட்டயும் `அந்தச் செய்தி' யைச் சொன்னேன் ." இனி கிருஷ்ணமூர்த்தியை மறக்க முடியாதுய்யா " அப்படின்னு அய்யா சொல்லி சிரிச்சாங்க. </div><div><br /></div><div>பத்து மாதங்களுக்கு முன்பு நம்ம அண்ணன் கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணம் தளபதி அவர்கள் தலைமையில் நடந்தது. வாழ்த்து வழங்கிய எல்லோரும் கிருஷ்ணமூர்த்தி அண்ணனை பெருமையாகச் சொல்லி ` வயதில் குறைந்தவர்களையும் அண்ணன்னு கூப்பிடுவாரு'ன்னு பாராட்டினாங்க. </div><div><br /></div><div>நான் வாழ்த்தும் போது `அந்த செய்தியைச்' சொல்லி வாழ்த்தினேன் தளபதி அவர்கள் உட்பட அனைவரும் சிரிக்க, நம்ம அண்ணனும் கண்ணுல தண்ணி வர சிரிச்சாரு .</div><div><br /></div><div>`அண்ணன் கிருஷ்ணமூர்த்தி எல்லோரையும் அண்ணன்னு கூப்பிடுவார் என்பது தெரிந்த விஷயம். அவர் பத்தி எங்க பக்கம் ஒரு செய்தி உண்டு. ஒரு நாள் அண்ணான் காரில் போய்க்கிட்டிருந்தாரு. ஒரு இடத்துல வயல்ல நிறைய பேரு வேலை செஞ்சிக்கிட்டிருந்தாங்க.</div><div><br /></div><div>வயல் ஓரமா ஒரு தூளி கட்டி ஒரு குழந்தைய படுக்க வச்சிருந்தாங்க. அந்த இடத்த அண்ணன் கார் கிராஸ் பண்றப்ப, அந்தக் குழந்தை அழுதுகிட்டுருந்தது. உடனே அண்ணன் வண்டிய நிறுத்தச் சொல்லி இறங்கினாரு.</div><div><br /></div><div>வயல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருந்தவங்கள பாத்து, `ஏம்மா, அண்ணன் அழுதுகிட்டு இருக்காரு, வந்து தூக்குங்கம்மா ' அப்படின்னு சொல்ல, அந்தக் குழந்த அண்ணனே அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிட்டாரு. ' " </div><div><br /></div><div> எஸ்.எஸ்.சிவசங்கர் </div><div> ( 16.07.2013 )</div><div><br /></div><div><br /></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-45072739686361892792021-05-22T10:50:00.001-07:002021-05-22T11:01:09.202-07:00தீர்ப்பு <div> "" தீர்ப்பு ''</div><div><br></div><div><br></div><div>பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு, " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும் ஆண்டேரிக்கரை மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண படையாச்சி. </div><div><br></div><div> அந்த ஊரு பிறை நிலா வடிவான தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில் குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது. ஏரிக்கு வடமேற்கே அரசமரம் பக்கத்தில் உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ? அந்த குளியல் துறைக்கு மேற்கு பக்கத்தில் மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இருந்ததால் இடுகுறி பெயராக அனைத்து துறையும் பரிமளித்திருந்தது . அதுக்கு நேர் கிழக்கே உள்ள துறை மாது ஊட்டு துறை, அதுக்கு அடுத்து கொழுந்து ஊட்டு துறை, அடுத்து வில்லு ஊட்டு துறை, அதிலிருந்து கிழக்கே தெற்கு நோக்கியதான கரையில் முதலாவது " தாடி ஊட்டு துறை ' அடுத்து " சீப்பிலி ஊட்டு துறை ' என ஊரார் பெயரிட்டு சொல்லி வந்தனர். </div><div><br></div><div> ஏரியினுள்ளே கட்டியிருந்த வேட்டியோடு ,படர்ந்து கிடக்கும் தாமரை கொடிகளை இரு கைகளாலும் ஒதுக்கியவாறே இடுப்பளவு தண்ணீர் வரை உள்ளே போய் தலையை முங்கி எழுந்து ;கழுத்துப்பட்டை ,முதுகுபக்க அழுக்குகளை விரல்களால் தேய்த்து குளித்து எழுந்து கரையோரம் சுருட்டி வைத்த பச்சைத்துண்டை இடுப்பில் கட்டியவாறு, வேட்டியை அவிழ்த்து நாலு அலசு அலசி முறுக்கிப் பிழிந்து உதறி, முதுகில் போர்த்தி அந்தி வெயிலில் வேட்டியை காயவைத்தவாறே கிழக்கே போகும் ஒற்றைத் தார் ரோட்டில் பொடிநடையாக வீடு வந்து சேர்ந்தார் கிருஷ்ண படையாச்சி . </div><div><br></div><div><br></div><div>தொடரும் ........</div><div><br></div><div>கரிசல்நாடன் M.A,</div><div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-28541004292377217322021-05-15T22:52:00.001-07:002021-05-15T22:52:17.688-07:00அல்லல் ,அள்ளல் <div>பொருளறிவோம் </div><div><br></div><div>அல்லல் _ துன்பம் ,கஷ்டம்</div><div><br></div><div> எ கா ; 1 </div><div>அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு</div><div>மல்லல்மா ஞாலம் கரி</div><div>( குறள் எண்:245 )</div><div><br></div><div>எ கா ; 2.</div><div> "அல்லல் உழப்பிக்கும் சூது ' குறள் _ 938 </div><div><br></div><div>எ கா ; 3 </div><div>அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று _ ( திருவாசகம் 90 )</div><div><br></div><div><br></div><div>அள்ளல் _ எனும் சொல்லுக்கான பல பொருள்கள் </div><div><br></div><div>எடுத்தல், அள்ளுதல், பறித்தல்,</div><div>சேற்று நிலப்பரப்பு,</div><div>நெருக்கம்,</div><div>ஒருவகை நரகம்</div><div><br></div><div><br></div><div>எ கா ; 1 </div><div><br></div><div><br></div><div>" அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ' _ ( முத்தொள்ளாயிரம் ) </div><div><br></div><div>மேற்காணும் பாடலில் "அள்ளல்' எனும் சொல் சேற்று நிலப்பரப்பை குறிக்கிறது .</div><div><br></div><div><br></div><div>அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் ; கரிசல்நாடன் M,A </div><div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-75719159827861981722020-12-31T19:10:00.002-08:002020-12-31T19:12:27.284-08:00தாத்தாவுக்கு <div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1MzAO3mL8svsGE_xaVEl9s_WztfJgGS5Ar6y8WLKiB5jW4SnUfoJyPUQ7L53zv_kWzrDISufzxEsSlBnTxsfmx8Bm2a4MKQFM-M7gYoFakZPJlwNLN40OCBlAVi09VGWwG_lUkfQFd8Y/s523/FB_IMG_1589363222500.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="523" data-original-width="523" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1MzAO3mL8svsGE_xaVEl9s_WztfJgGS5Ar6y8WLKiB5jW4SnUfoJyPUQ7L53zv_kWzrDISufzxEsSlBnTxsfmx8Bm2a4MKQFM-M7gYoFakZPJlwNLN40OCBlAVi09VGWwG_lUkfQFd8Y/s320/FB_IMG_1589363222500.jpg" /></a></div><br />சரியாக நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.......என் தாத்தா தமிழ் நாவல்கள் நிறைய படிப்பார், அவர் புத்தகம் படிக்கும் போது தொந்தரவு செய்தால் 50 பைசா அல்லது 1 ரூபாய் கொடுத்து என்னை வெளியேற்றுவார்,,,, இப்படியே தினமும் என் வருமானம் 2 ரூபாயை எட்டிவிடும்... பிற்கால சோழர்களின் எழுச்சியை இரவு நேரத்தில் கதையாக கூறுவார்,,,96 விழுப்புன் பெற்ற விசயாலய சோழன்,, திருப்புறம்பிய போரில் பாண்டியரை விரட்டியடித்தது,, இப்படியாக சுவைபட கூறுவார். அவரின் படுக்கையருகில் புத்தகங்கள் நிறைய இருக்கும்,,ஒருநாள் நான் "கோபல்ல கிராமத்து மக்கள் " என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், அந்நாவலை படிக்க படிக்க சுவையாக இருந்தது,,,,அக்கதையும் மனதில் பதிந்து விட்டது,, கல்லூரியில் நான் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை ,,அப்போதும் அவர் என்னிடம் கேட்ட புத்தகம் "கலைஞரின் "பொன்னர் சங்கர் " நானும் ஒரு நண்பரிடம் வாங்கி தந்தேன்,,அதை 2 நாளில் படித்து முடித்தார்,,,இன்னும் என்ன புத்தகம் உள்ளது என்று கேட்டார்,,நான் உடனே தலைவரின் "சங்கத்தமிழ் "புத்தகம் கொடுத்தேன் ஆவலாக படிக்க ஆரம்பித்தார்,,ஆனால் அதற்குள்ளாகவே உடல்நிலை மோசமாகி ,,எங்கள் குடும்பத்தை விட்டு மறைந்தார்,,,,,,அவர் உயிர் பிரிந்த பிறகு அந்த புத்தகம் அவர் மார்பில் 1 நாள் துயில் கொண்டது,,,தற்போது அந்த புத்தகத்தை புரட்டும்போதெல்லாம் ...தாத்தா நினைவில் வந்து போகிறார், இந்த ஆண்டோடு 11 வருடம் ஆகிறது. </div><div><br /></div><div>சுரேஷ் மணியன் M. A,</div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-79596375191057945772020-12-19T09:39:00.000-08:002020-12-19T09:38:59.905-08:00குறள்கவிதை <div>குறள்கவிதை </div><div><br></div><div><br></div><div>இப்பிறவியில் உனைவிட்டு பிரியமாட்டேன் என்று </div><div>அவளை இறுகத் தழுவினான், அவன் . </div><div>அவளோ!</div><div>மறுபிறவியில் </div><div>நீ என்னை விட்டு பிரிந்துவிடுவாயா ?</div><div>என நினைத்து </div><div>கண் நீர் பொழிந்தாள்.</div><div><br></div><div> கரிசல்நாடன் </div><div><br></div><div><br></div><div>இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்</div><div>கண்நிறை நீர்கொண் டனள்</div><div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-21404251619566102112020-12-05T21:02:00.001-08:002020-12-05T21:02:43.226-08:00காரியம் ஆக வேண்டும்னா, கழுதைக் காலை வேண்டுமானாலும் பிடி <div>காரியம் ஆகனும்னா...!? கழுதையானாலும் காலை பிடி...!!!</div><div><br></div><div>கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...</div><div><br></div><div>இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்... குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன... </div><div><br></div><div>எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்... உடனே தேவகி கணவன் வசுதேவன்...</div><div><br></div><div>தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்... கழுதையும் கத்தவில்லை... கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது</div><div><br></div><div>எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!</div><div><br></div><div>கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.</div><div><br></div><div>சுரேஷ்மணியன் M A </div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-4869065991455195162020-11-25T07:58:00.001-08:002020-11-25T07:58:45.277-08:00நீர்நிலைகளின் பெயர்காரணங்கள் <div><br></div><div>நீர்நிலைகளின் பெயர்காரணங்கள். </div><div><br></div><div>குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)</div><div><br></div><div>ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)</div><div><br></div><div>ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)</div><div><br></div><div>பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)</div><div><br></div><div>மடு</div><div><br></div><div>கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)</div><div><br></div><div>மோட்டை</div><div><br></div><div>அள்ளல்</div><div><br></div><div>கிணறு</div><div>துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)</div><div><br></div><div>தடாகம் அல்லது வாவி</div><div><br></div><div>ஓடை</div><div><br></div><div>அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)</div><div><br></div><div>அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )</div><div><br></div><div>அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)</div><div><br></div><div>அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)</div><div><br></div><div>அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை</div><div><br></div><div>ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு.</div><div><br></div><div> தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.</div><div><br></div><div>இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.</div><div><br></div><div>கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.</div><div><br></div><div>கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.</div><div><br></div><div>சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)</div><div><br></div><div>மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.</div><div><br></div><div>குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.</div><div><br></div><div>கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.</div><div><br></div><div>தருவை - பெரிய ஏரி</div><div><br></div><div>அன்போடும் தமிழோடும் ; கரிசல்நாடன் Alias சுரேஷ்மணியன். </div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-38257393308383878672020-11-03T08:12:00.000-08:002020-11-03T08:12:57.497-08:00<p> நானும் மகனும் </p><p>திருடர் - போலிஸ் விளையாட்டு விளையாடினோம் </p><p>திருடராய் மாறி ஒளிந்து கொண்டேன் </p><p>துப்பாக்கியை நீட்டியபடி </p><p>என்னை கண்டுபிடித்த அவன் </p><p>கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தமாதிரி </p><p>இரு கால்களையும் உதைத்து உதைத்து </p><p>சந்தோசக் களிப்பில் கூத்தாடுகிறான்</p><p><br /></p><p>என்னை அவன் கண்டுபிடித்த தருணத்தில் </p><p>நான் தொலைந்து போனது </p><p>அறியாமல் </p><p><br /></p><p>-----கரிசல்நாடன் </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGp0i1o5Yjkb03oIJ9Ua8a6SMgmLEgL38ukY4q4z-LeOUUHuXl2hPFwLA3oPdkmYxEqSOFc_IJVj9b9uP4MpBPcu7xnQewnF57F2YQGbifOvBmCXOEGW65EWrxm_bFUbXhlQ_fE88SYfI/s2048/IMG_20201101_084904.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1518" data-original-width="2048" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGp0i1o5Yjkb03oIJ9Ua8a6SMgmLEgL38ukY4q4z-LeOUUHuXl2hPFwLA3oPdkmYxEqSOFc_IJVj9b9uP4MpBPcu7xnQewnF57F2YQGbifOvBmCXOEGW65EWrxm_bFUbXhlQ_fE88SYfI/s320/IMG_20201101_084904.jpg" width="320" /></a></div><br /><p></p>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-52429753930036226702020-11-02T08:36:00.004-08:002020-11-02T08:36:47.171-08:00நினைவெல்லாம் மத்தாப் பூபூ<p> 👇👇👇👇👇👇👇👇👇</p><p><br /></p><p>விடிகாலைத் தீபாவளிக்கு </p><p>முன்னதாக </p><p>தன் தாத்தா </p><p>சில பத்து ரூபாய்களுக்கு வாங்கித் தந்த பட்டாசுகளை </p><p>விடியும் முன் </p><p>நூறு முறையேனும் </p><p>எடுத்து எடுத்துப் பார்த்து </p><p>ஆனந்தம் கொள்ளும் </p><p>ஓர் கிராமத்துச் சிறுவனைப் போல் </p><p><br /></p><p> என் இதயத்தில் இருக்கும் உன்னை</p><p> அடிக்கடி </p><p>வெளியே எடுத்துப் பார்த்து </p><p>மகிழ்ச்சிக் கொள்கிறேன்.</p><p><br /></p><blockquote style="border: none; margin: 0 0 0 40px; padding: 0px;"><blockquote style="border: none; margin: 0 0 0 40px; padding: 0px;"><blockquote style="border: none; margin: 0 0 0 40px; padding: 0px;"><p></p><div style="text-align: center;">....... கரிசல்நாடன் </div><p></p></blockquote></blockquote></blockquote><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFaYMBGRB6EzUhSxN4-PHXownmx7XM2RAMQ9NeeleYzlu95w3l-ukGy25x6-64-M4A2s3SG5Q0XEFbWH6CIw-OpB3KAyUPCpOWqMSf75hfFkUnggcbaZy9PXwq5E7f0IqIslItGWIOrQA/s1350/namita.official_97956552_127410898953491_2913125203975527029_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1350" data-original-width="1080" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFaYMBGRB6EzUhSxN4-PHXownmx7XM2RAMQ9NeeleYzlu95w3l-ukGy25x6-64-M4A2s3SG5Q0XEFbWH6CIw-OpB3KAyUPCpOWqMSf75hfFkUnggcbaZy9PXwq5E7f0IqIslItGWIOrQA/s320/namita.official_97956552_127410898953491_2913125203975527029_n.jpg" /></a></div><br /><p></p>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-11419875734046483342020-11-01T08:31:00.002-08:002020-11-01T08:31:24.751-08:00<p> மீள்பதிவு .</p><p><br /></p><p>தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம். பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது இதோ ! அந்த வரிகள் .</p><p><br /></p><p>" தண்டவாளத்தில் </p><p>நீ </p><p>தலை வைத்து படுத்ததால்தான் </p><p>தலைவா !</p><p>இன்று தமிழ் </p><p>நிமிர்ந்து நிற்கிறது. </p><p><br /></p><p>மேலும், </p><p>அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் </p><p><br /></p><p>" இவன் </p><p>வெள்ளை யானைகளோடு </p><p>போராடிய போது </p><p>வீழ்ந்ததில்லை </p><p>கறுப்பு யானையோடு </p><p>கைகுலுக்கிய போதுதான் </p><p>காணாமல் போனான்.</p><p><br /></p><p>இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின </p><p><br /></p><p>ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு , பிறகு அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே அரண்டு போய் தமிழ்த்துறையின் படிக்கட்டில் விழுந்தேன், விழுந்த என்னை அரவணைப்போடு அள்ளிக்கொண்டனர் அத்துறை பேராசிரியர்கள்.</p><p>முதலாமாண்டு பயின்ற போது " இலக்கிய விமர்சனங்கள் " எனும் நூல் பாடமாக இருந்தது அதன் மூலம் கம்பனின் காவியத்தின் மீது தனியாத தாகம் ஏற்பட்டது, அத்தாகத்தை தத்தனூர் கிளை நூலகத்தில் உள்ள கம்பன் ஆய்வு நூல்கள் தீர்த்தன என்றால் மிகையாகாது. இன்று வரை ஒவ்வொரு நாளும் கம்பனின் கவித்திறம் மாபெரும் பிரமிப்பை என்னுள் ஏற்படுத்தி கொண்டே வருகிறது .</p><p><br /></p><p>கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கம்பனின் கவித்திறத்திற்கும் உவமை நயத்திற்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொற்களை எடுத்தாளும் திறத்திற்கும் பல்வேறு பாடல்களை உதாரணம் காட்டலாம்.</p><p><br /></p><p>இதோ, பால காண்டம். எழுச்சிப் படலம்.</p><p><br /></p><p>சிவதனுசை முறித்து இராமன் வெற்றி கொண்டான் என்ற செய்தி தசரதருக்கு வந்து சேருகிறது. உடனே தனது படை பரிவாரங்களுடன் மிதிலைக்குப் புறப்பட ஆயத்தமாகிறார் அவர். அவர் தம் சேனைகள் ஊழிக்காலத்தில் ஓங்கிப் பொங்கும் கடல் போல ஒன்று சேர்ந்து புறப்பட ஆரம்பித்தன. தன் படைக்குழுவினரின் இறுதியாகத் தான் செல்லலாம் என தசரதர் வெகு நேரமாகக் காத்திருக்கிறார். காத்திருப்பவர், வெகு நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.</p><p><br /></p><p>படையின் முதல் வரிசை மிதிலையைச் சென்றடைந்து விட்டது. ஆனால் இறுதி வரிசை இன்னமும் அயோத்தியைத் தாண்டவில்லை. அந்த அளவிற்கு வரிசை நீண்டிருந்தது என்று வர்ணிக்கிறார் கம்பர். அதுவும் எங்கெங்கு பார்த்தாலும் மனிதத் தலைகளாம். மேலே இருந்து உழுந்து (உளுந்து) போட்டால் கூடக் கீழே விழாதாம்.</p><p><br /></p><p>அதனை அவர் மிக அழகாக,</p><p><br /></p><p>” உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் அழுந்திய உயிர்க்கும் எலாம் அருட் கொம்பு ஆயினான் எழுந்திலன் எழுந்து இடைப் படரும் சேனையின் கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே”</p><p><br /></p><p>என்று விளக்குகிறார் பாடலில்.</p><p><br /></p><p>எள் போட்டால் எள் விழ இடமில்லை என்பது தான் வழக்கில் இருக்கும் சொல். ஆனால் கம்பர் அதனைப் பயன்படுத்தாமல் அதற்கு மாறாக உழுந்து போட்டால் விழ இடமில்லை என்று கூறியிருக்கிறார். ஏன் தெரியுமா?</p><p><br /></p><p>அவர்கள் அனைவரும் செல்வது இராமனின் மணவிழாவைக் காணவும், அதன் வெற்றியைக் கொண்டாடவும் தான். அது ஒரு மங்கல நிகழ்ச்சி. ஆனால் எள் என்பது அமங்கல நிகழ்ச்சிகளில், குறிப்பாக நீத்தார் கடனுக்கான சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியது. அதனை ஒரு மங்கலகரமான நிகழ்வுக்காகச் செல்லும் இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக மிக நுணுக்கமாக கம்பர் “எள் விழவும் இடம் இல்லை” என்று சொல்லாமல் “உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்” என்று மிக அழகாகப் பயன்படுத்தி உள்ளார்.</p><p><br /></p><p>அதே சமயம் யுத்த காண்டத்தில் இராமனின் அம்புகளால் துளைக்கப்பட்டு இராவணன் வீழ்ந்து கிடக்க, அவனை அணுகிப் புலம்பும்அவன் மனையாள் மண்டோதரியின் கூற்றாக,</p><p><br /></p><p>“வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவான் வாளி”</p><p><br /></p><p>என்று கூறுமிடத்தில் “எள்ளிருக்கும் இடமின்றி” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி, அதன் அமங்கல நிகழ்வை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதுவும் இராவணனைத் துளைத்த இராம பாணமானது, சீதையின் நினைவு மேலும் எங்காவது உள்ளே இருக்குமோ என்று உடல் முழுவதும் துளைத்ததாகக் குறிப்பிட்டுள்ள நயம் வியந்து போற்றத்தக்கது.</p><p><br /></p><p>கம்பனின் இந்தச் சொல்லாற்றல் என்றும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதல்லவா? </p><p><br /></p><p>அதனால்தான் கவியரசு கண்ணதாசன் கம்பனை பற்றி பாடுவார் </p><p><br /></p><p> " பத்தாயிரம் கவிதை</p><p>முத்தாக அள்ளிவைத்த</p><p>சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும்</p><p>வித்தாக வில்லையென்று பாடு!</p><p><br /></p><p>சீதை நடையழகும்</p><p>ஸ்ரீராமன் தோளழகும்</p><p>போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப்</p><p>போட்டான் மதுக்குடத்தில் அள்ளி!</p><p><br /></p><p>அண்ணனொடு தம்பியர்கள்</p><p>நாலாகி ஐந்தாகி</p><p>ஆறேழு ஆனவிதம் கூறி - எனை</p><p>ஆளுகிறான் மூளைதனில் ஏறி!</p><p><br /></p><p>தென்னிலங்கைச் சோலையிலே</p><p>சீதை அனுமனிடம்</p><p>சொன்னதொரு வாசகத்தைப் பார்த்து - நான்</p><p>துள்ளிவிட்டேன் மெனியெல்லாம் வேர்த்து!</p><p><br /></p><p>கள்ளிருக்கும் கூந்தலினாள்</p><p>உள்ளிருப்பாள் என்று சொல்லி</p><p>பள்ளமிடும் ராகவனின் அம்பு - அது</p><p>பாட்டல்ல உண்மையென்று நம்பு!</p><p><br /></p><p>காலமெனும் ஆழியிலும்</p><p>காற்றுமழை ஊழியிலும்</p><p>சாகாது கம்பனவன் பாட்டு - அது </p><p>தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு!</p><p><br /></p><p>கம்பனெனும் மாநதியில்</p><p>கால்நதிபோல் ஆவதென</p><p>நம்புகிறேன் பாட்டெழுதும் நானே - அந்த</p><p>நாயகன்தான் என்ன நினைப்பானோ? </p><p><br /></p><p>அன்பர்களே ! இலக்கிய நண்பர்களே ! தமிழுக்கு " கதி "</p><p>கம்பனும், திருவள்ளுவரும்தான் </p><p>எனவே கவிச்சக்கரவர்த்தி </p><p>கம்பனைப் போற்றுதூம் கம்பனைப் போற்றுதூம்</p><p>கவி ஆற்றலில் ஈடின்மையால்…</p><p><br /></p><p>அன்புடன் : சு. கரிசல்நாடன். </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDjBYuE4k3Cv-NfF2RyCsMQv7wGVGzAZoIfxUbo0EEaliDxR3SKt2_vLi5R4E11Bi1pIJUqzCDRrFuDQvMubaJNemKmk8v1-IbYC0-pDCderQCNns-HVlcHKiVFgmqoORLQXDzoeYwOzo/s656/images+%25282%2529.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="656" data-original-width="467" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDjBYuE4k3Cv-NfF2RyCsMQv7wGVGzAZoIfxUbo0EEaliDxR3SKt2_vLi5R4E11Bi1pIJUqzCDRrFuDQvMubaJNemKmk8v1-IbYC0-pDCderQCNns-HVlcHKiVFgmqoORLQXDzoeYwOzo/s320/images+%25282%2529.jpeg" /></a></div><br /><p></p>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-77849063555975041322020-11-01T00:37:00.001-07:002020-11-01T00:37:12.506-07:00Teachers memes <p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2VbJi0m7GddZM0xckGyYAVsRJPhsEc0I2z9gODuodwQ1EHPtbRWofF61rP2AVLb9CREifciUrk8phaoZUviFJ1Ccx3pS1uxtmvPDNbPPtFYjwo1vmHWcuDnkg8CzKUpkCa-e7ht0eDvc/s1007/20201101-010116.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1007" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2VbJi0m7GddZM0xckGyYAVsRJPhsEc0I2z9gODuodwQ1EHPtbRWofF61rP2AVLb9CREifciUrk8phaoZUviFJ1Ccx3pS1uxtmvPDNbPPtFYjwo1vmHWcuDnkg8CzKUpkCa-e7ht0eDvc/s320/20201101-010116.jpg" /></a></div><br /><p></p>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-52398171752824142572020-10-27T19:52:00.001-07:002020-10-27T19:52:22.629-07:00குண்டலகேசி <div>மறிப மறியும் மலி்ர்ப மலிரும்</div><div>பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும்</div><div>அறிவது அறிவார் அழுங்கார் உவவார்</div><div>உறுவது உறுமென்று உரைப்பது நன்று</div><div> </div><div> ___ குண்டலகேசி </div><div><br></div><div>அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்தல் இயலாது)அவ்வாறே வளரும் விதியுடைய எல்லாமும் வளர்ந்தே தீரும் , (அவற்றை வளராமல் தடுக்க முடியாது) </div><div>பயன் பெறுகின்ற விதியுடைடையன பெற்றே தீரும் ,(அப்பயனைப் பெறாதவாறு செய்தல் இயலாது),</div><div> அதேபோல பெற்றபயனை இழக்கும் விதியுடைய அவற்றை இழந்தே தீரும், (இழக்கமுடியாதபடி செய்ய முடியாது )</div><div>ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர், தமக்குப் பொருளிழவு நேர்ந்ததே இது பொருளியல்பென் றுணர்ந்து அந்த இழப்பு பொருட்டு வருந்துதலிலர்.</div><div>அவ்வாறே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பதுமில ராவர்;</div><div> ஆதலால் “வருவது வந்தே தீரும்” என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொள்ளுங்கள் .</div><div><br></div><div>வணக்கம் </div><div><br></div><div>சுரேஷ்மணியன் M A ,</div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-38490884358001469142020-10-23T00:48:00.001-07:002020-10-23T00:48:54.225-07:00குறள் கவிதை <div>கண்ணிதழ் மெல்ல மறைத்து</div><div>பார்வைதன் அளவை சிறுத்து </div><div>நீ பார்த்த </div><div>இந்த சிறுபார்வையே </div><div>காதல் நோய்க்கு </div><div>ஏற்ற மருந்து.</div><div><br></div><div><br></div><div>கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்</div><div>செம்பாகம் அன்று பெரிது</div><div><br></div><div>( குறள் எண்:1092)</div><div><br></div><div>சுரேஷ்மணியன் M A, <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4kE5oPNF-h5xCTbjSZgvmn_EhlRhLOXp13lNOG5-BpeOxzL0dBmWKhNWaAem_jQ0rUvCYUadeRfne4uv6YCoAUP9w21pTiPe8J9NzT5OmSx6_gLRg39ol6rd8dsLZgt1Ux97esEIFCmU/s1600/1603439328808283-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4kE5oPNF-h5xCTbjSZgvmn_EhlRhLOXp13lNOG5-BpeOxzL0dBmWKhNWaAem_jQ0rUvCYUadeRfne4uv6YCoAUP9w21pTiPe8J9NzT5OmSx6_gLRg39ol6rd8dsLZgt1Ux97esEIFCmU/s1600/1603439328808283-0.png" width="400">
</a>
</div></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-18719591188477762562020-10-22T10:19:00.001-07:002020-10-22T10:20:00.198-07:00கடிகாரம்<div>என்னை ஏன் அடிக்கடி பார்க்கிறாய்? </div><div>பார்த்து என்ன கிழித்துவிட்டாய்? </div><div>கிழிக்கப்போகிறாய்? </div><div>கேட்டுக்கொண்டே</div><div>ஓடிக்கொண்டிருக்கிறது </div><div>என் கைகடிகாரம் </div><div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-57513882535067832532020-10-22T00:12:00.001-07:002020-10-22T00:12:53.844-07:00குறள்கவிதை <div><br></div><div> குறள்கவிதை </div><div><br></div><div>மங்கைகொண்ட காதலை மடைமாற்றலாம் </div><div>என்று நினைக்காதீர் !</div><div><br></div><div>என் இதய வயலில் </div><div>நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் ! </div><div><br></div><div>ஊரார் ஏளனப் பேச்சை எருவாக்கி </div><div>தாயின் இடிச்சொல்லை நீராக்கி </div><div>இதய வயலில் </div><div>காதல் பயிர் வளர்க்கிறேன் !</div><div><br></div><div>பரிகாசம் பேசி காதல் பயிரை </div><div>அழித்துவிடலாமென எண்ணாதீர் !</div><div>நெய்யை ஊற்றி </div><div>நெருப்பை அணைக்க முயலாதீர் !</div><div><br></div><div>என் இதய வயலில் </div><div>நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் . </div><div> </div><div> </div><div>கவிதையின் கரு ; </div><div><br></div><div>ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்</div><div>நீராக நீளும்இந் நோய்</div><div><br></div><div>(குறள் எண்:1147)</div><div><br></div><div><br></div><div>நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்</div><div>காமம் நுதுப்பேம் எனல்</div><div><br></div><div>(குறள் எண்:1148)</div><div><br></div><div><br></div><div>வள்ளுவர் வரிகளுடன் ; சுரேஷ்மணியன் M A, </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW8F8mr-2ybC6ayKxm_Go8bUULNtiEM17X7ROMn74iTBsCgAC7cJDk97y4dK1SWz1VjUzVNdN4ozKqlLGD_nhF1fxl9zi1zlD_emT64kLvnB3U2Zv29tyx_GAiNT3ImoCtBB_FLOLBJzY/s1600/1603350768225590-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW8F8mr-2ybC6ayKxm_Go8bUULNtiEM17X7ROMn74iTBsCgAC7cJDk97y4dK1SWz1VjUzVNdN4ozKqlLGD_nhF1fxl9zi1zlD_emT64kLvnB3U2Zv29tyx_GAiNT3ImoCtBB_FLOLBJzY/s1600/1603350768225590-0.png" width="400">
</a>
</div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-24064929184703753082020-10-20T20:46:00.002-07:002020-10-20T20:48:34.915-07:00திருவள்ளுவமாலை, கபிலர் பாடல் <div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDvLJcHe8Y4j6guR40r49InLKbbzQut1HMUBbYFCy_5Dy6C1mHmLPHR3VS6MPYD0OYYbqHS8N9ox685UJBkF7C6l0SRjSZpMc4ERSsyQS3hhOsjwF_knLXclEdAG-xPYQUzxFHY8b85gs/s656/images+%25282%2529.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="656" data-original-width="467" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDvLJcHe8Y4j6guR40r49InLKbbzQut1HMUBbYFCy_5Dy6C1mHmLPHR3VS6MPYD0OYYbqHS8N9ox685UJBkF7C6l0SRjSZpMc4ERSsyQS3hhOsjwF_knLXclEdAG-xPYQUzxFHY8b85gs/s320/images+%25282%2529.jpeg" /></a></div><br />அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம். </div><div><br /></div><div>திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர் </div><div><br /></div><div>தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட</div><div>பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு</div><div>வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்</div><div>வெள்ளைக் குறட்பா விரி (௫)</div><div><br /></div><div><br /></div><div><br /></div><div>கருத்துரை</div><div>வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? </div><div><br /></div><div> என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும்</div><div><br /></div><div><br /></div><div>சுரேஷ்மணியன் M A , </div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-50139339104949251922020-10-19T23:39:00.001-07:002020-10-19T23:39:43.410-07:00திருவள்ளுவமாலை 4 ஆம் பாடல் விளக்கம் <div>திருவள்ளுவமாலையில் உக்கிரப்பெருவழுதியார் பாடியது. </div><div><br></div><div><br></div><div>நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்</div><div>தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை</div><div>வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்</div><div>சிந்திக்க கேட்க செவி ( 4 )</div><div><br></div><div>கருத்துரை : </div><div><br></div><div>இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.</div><div> நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும். என்கிறார் புலவர்.</div><div><br></div><div>சுரேஷ்மணியன் M A, </div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4044327351822018011.post-92164317104756651122020-10-18T07:09:00.001-07:002020-10-18T07:10:25.238-07:00கிளியே ! கிளியே! <div><br></div><div>பாட்டிலுக்கு பெயர் பெற்ற ஊரை </div><div><br></div><div>தன் பாட்டினால் புகழடையச் செய்த </div><div>பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அழகின் சிரிப்பு நூலில் கிளியின் தன்மை, அழகு, </div><div>குணம் பற்றி கூறுமிடத்து, ஒரிடத்தில் கிளியைப்பற்றி பாடுகிறார் .</div><div><br></div><div> முடிகிற இடத்திலிருந்து புதிய எண்ணங்களும், ஆற்றொணா வருத்தமும் இக்காலத்திய இளையோர் பற்றி நினைக்கையில் மேலிடுகிறது எனக்கு </div><div><br></div><div><br></div><div>"" காட்டினில் திரியும் போது</div><div>கிரீச்சென்று கழறு கின்றாய்;</div><div>கூட்டினில் நாங்கள் பெற்ற</div><div>குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!</div><div>வீட்டிலே தூத்தம் என்பார்</div><div>வெளியிலே பிழைப்புக் காக</div><div>ஏட்டிலே தண்ணீர் என்பார்</div><div>உன்போல்தான் அவரும் கிள்ளாய்! ''</div><div><br></div><div>கிளியே ! காட்டில் திரிகிறபோது கிரீச் கிரீச்சென்கிறாய் </div><div>கூட்டில் இருக்கும் போது எங்களின் குழந்தைகள் மழலைமொழி போல கொஞ்சுகிறாய் </div><div><br></div><div>சிலர் வீட்டில் இருக்கும் போது "" தூத்தம் '' ( அக்ரஹார வழக்கு ) என்பார் ,பொதுவெளியில் வந்தால் அதனை தண்ணீர் என்பார்கள். உன்னைப் போல்தான் அவரும் கிளியே வீட்டில் ஒன்று பேசுவார் வெளியில் ஒன்று பேசுவார். </div><div><br></div><div>என்கிறார் பாவேந்தர். </div><div>மேற்கண்ட கிளிக்கு கூறிய ஒப்புமையை, தற்கால நம் தமிழர் பேசும் முறையோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.</div><div><br></div><div><br></div><div> வீட்டிலே சோறென்பார் ,எலுமிச்சை சோறென்பார்,தயிரென்பார், கோழிக்குழம்பென்பார், பொறியலென்பார், சட்டையென்பார், முடியென்பார்,மயிறென்பார் ..</div><div>இதுபோல் உள்ள தமிழை இல்லத்தில் பேசுவார்,</div><div>ஆனால் </div><div>பொதுவெளியிலோ நாகரீகம் கருதி தமிழை மறைத்து </div><div>ஒய்ட் ரைஸென்பார், லெமன் ரைஸென்பார், Curd rice என்பார், Chiken greavy என்பார், Side dish என்பார், Shirt என்பார், Hair cutting என்கிறார் கிளியே உன்னைப் போலவே இவர்களும் கிளியே ... என்று நினைக்கத் தோன்றுகிறது.</div><div><br></div><div>சுரேஷ்மணியன் M A,</div><div><br></div><div><br></div><div><br></div>sureshhttp://www.blogger.com/profile/16333846073900117964noreply@blogger.com0